கோவை, அக்.20- மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என ஆட்சியரிடம் மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் வலியுறுத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை வெள்ளியன்று நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் சந்தித்து பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆட்சி யர் கவனத்திற்கு கொண்டு வந் தார். இதில், ஒண்டிப்புதூர் பகுதியில் சூர்யா நகர் எல்சி 3 ரயில்வே கடவு பகுதியில் மேம்பாலம் கட்ட நடவ டிக்கை எடுத்திட வேண்டும். அது வரையில் இந்த ரயில்வே கடவு பகுதியை மக்கள் பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றார். இதற்கு ஆட்சியர், சம்பந்தப் பட்ட ரயில்வே கடவு பகுதியில் உள்ள போக்குவரத்து நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப் பட்டு உள்ளதாகவும், குழுவின் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை களை எடுப்பதாகவும் தெரிவித்தார். இதேபோன்று, சித்தாபுதூர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடு களுக்கு குடிநீர், மின் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, மின் தூக்கி போன்ற பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத் திட வேண்டும். மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம் பாளையம், ஜி.என்.மில்ஸ் பகுதியில் மேம்பா லங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல, பெரியநாயக்கன் பாளையம் மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேம்பால அணுகுசாலை பணிகளை யும் விரைந்து முடித்திட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனைக் கேட்ட ஆட்சியர், டிசம்பர் மாத இறுதிக்குள் மேம்பால பணிகளை முடித்திட உள்ளதாக தெரிவித்தார். ஜி.என்.மில்ஸ் மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வந்ததற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தனது வாழ்த்துக்களை பி.ஆர்.நடராஜன் தெரிவித்துக் கொண்டார். முன்னதாக இந்த சந்திப்பின் போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் சிவசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.தெய்வேந்திரன், கே.எஸ்.கனக ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜாகீர் மற்றும் ஒண்டிப்புதூர் குடியி ருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.