பொள்ளாச்சி, பிப்.17- பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டம் பட்டி அம்மணீஷாவார் கோவில் வளாகத்தில் இருந்த பழமையான வேம்பு மரத்தை அனுமதி இன்றி வெட்டி விற்பனை செய்த அறங்காவ லர்கள் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர் மனு அளித்தனர். இதுகுறித்து அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் பொள் ளாச்சி தாலுகாக் குழு சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று அளித்த கோரிக்கை மனுவில், பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டம் பட்டியில் மிக தொன்மையான அம்மணீஷாவார் திருக்கோவிலில், சுமார் நூறாண்டு பழமை வாய்ந்த வேம்பு மரம் உள்ளது. இதனை வருவாய்த்துறை, வனத்துறை, அற நிலைத்துறை அனுமதியின்றி அறங்காவலர் குழுத் தலைவர் பார்த்திபன் மற்றும் அறங்காவலர் கள் சட்ட விரோதமாக வெட்டி விற் பனை செய்து ஆதாயம் அடைந் துள்ளார். பல ஆண்டுகள் பழமை யான வேம்பு மரத்தை ரூபாய் 5 ஆயி ரத்துக்கு விற்பனை செய்துள்ளனர். வெளி சந்தையில் வெட்டப்பட்ட வேம்பு மரத்தின் மதிப்பு ஒரு லட் சத்து ஐம்பதாயிரம் இருக்கும். ஆனால் உள்நோக்கத்துடன் பகி ரங்க ஏலம் எதுவும் நடத்தாமலும் இது குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் செய்யாமலும் அறங்காவலர் குழுத் தலைவரும், அறங்காவலர் குழு உறுப்பினர்களும் ஆதாயம் அடைந்துள்ளனர். ஆதாயத்திற்காக உள்நோக்கத்துடன் செயல்பட்டு கோவிலுக்கும் இந்து சமய அற நிலையத்துறை கற்கும் நிதி இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அறங்காவலர் குழுவை கலைத் திடவும் வேம்பு மரத்தை அனுமதி யின்றி வெட்டி விற்பனை செய்தவர் கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டள்ளது. முன்னதாக நடைபெற்ற இந்த மனு அளிக்கம் இயக்கத்தில், விவ சாயத் தொழிலாளர் சங்க பொள் ளாச்சி தாலுகாச் செயலாளர் கே.ஏ. பட்டீஸ்வர மூர்த்தி மற்றும் மரங்கள் பாதுகாப்புக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.