districts

img

பதினாறு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நீதி கேட்டு ததீஒமு, மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 திருப்பூர், ஜன.11- பதினாறு வயது சிறுமிக்கு செவிலியர் உஷா ராணி சட்டவிரோத கருக்கலைப்பு செய் வதற்கு அரசு மருத்துவமனையில் உடந்தை யாக இருந்தவர்களை கைது செய்ய கோரி  ததீஒமு மற்றும் மாதர் சங்கம் சார்பில் வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம் எரங்கப்பட்டியைச் சேர்ந்த 16  வயது பட்டியலினச் சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில் ராஜேந்திரன், குற் றத்தை மறைக்க உதவிய சரவணன், கருவை  சட்ட விரோதமான முறையில் கலைத்த அரசு மருத்துவமனை செவிலியர் உஷாராணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், கொடுமைக்குள்ளான சிறுமிக்கு அரசின் தீருதவித் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் குடும்பம், சொந்த  ஊரைவிட்டு துரத்தப்பட்டுள்ளனர். மேலும்,  செவிலியர் உஷா ராணி சட்டவிரோத கருக்க லைப்பு செய்வதற்கு அரசு மருத்துவமனை யில் உடந்தையாக இருந்தவர்களைக் கைது  செய்யாததை கண்டித்தும், பாதிக்கப்பட்ட சிறு மியின் குடும்பத்தினருக்கு அவர் வசித்த கிரா மத்திலேயே இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி தாராபுரம், அண்ணாசிலை அருகில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற் றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ். பவித்ரா தேவி தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ச.நந்த கோபால், மாவட்டச் செயலாளர் சி.கே.கனக ராஜ், மாவட்டப் பொருளாளர் ஏ.பஞ்சலிங் கம், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ர.கவிதா உட்பட முற்போக்கு அமைப்புகளின்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடி வில், சி.பொன்னுசாமி (சிஐடியு) நன்றி கூறி னார்.