சேலம், ஜூன் 16- சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளை யம், மணியார்குண்டம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், தாட்கோ மூலம் டிராக்டர் வாங்க கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டார். இதற்கான விண்ணப்பங்கள் அளித்த நிலையில், அவரிடம் நேர்காணலும் மேற் கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரூ.7.50 லட்சம் மதிப்பிலான கடனுக்கு, 50 சத விகிதம் மானியம் வழங்குவதற்காக ரூ.15 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என மாவட்ட மேலாளர் (பொ) சாந்தி கேட்டுள் ளார். இதனையடுத்து லஞ்சம் கொடுக்க விரும் பாத குமார், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறை அறிவுறுத்தலின்படி குமார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, மாவட்ட மேலா ளர் சாந்தியிடம் கொடுக்க வந்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ரவிச்சந்தி ரன் தலைமையிலான காவல்துறையினர், லுங்கி அணிந்தபடி மாறுவேடத்தில் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து குமார், சாந்தியிடம் லஞ்சம் பணத்தை கொடுக்க முயன்றார். அப்போது மாவட்ட மேலாளர் பொறுப்பில் உள்ள சாந்தி அலுவலக உதவியாளரான மற்றொரு சாந்தி யிடம் வழங்குமாறு தெரிவித்ததையடுத்து, குமார் அவரிடம் சென்று லட்சம் பணத்தை வழங்கினார். அப்போது அலுவலகத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்தனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட மேலாளர் சாந்தி மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.