districts

img

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணிகள் ஆய்வு

தாராபுரம், ஜன.21- தாராபுரத்தில் சுமார் 12.50 கோடி  மதிப்பில் கட்டப்பட்டு  வரும்  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  கட்டுமான பணிக்கு அரசு சட்டமன்றத்தில் ரூ.12.50 கோடி  ஒதுக் கீடு செய்யப்பட்டது. அதன் கட்டுமான பணிகளுக்கு கடந்த  டிச. 23 ஆம் தேதி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் துறை அமைச்சர்  கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஐ.டி.ஐ வளாகத்தில் கட்டு மான பணியை தொடங்கி வைத்தனர். அதன் முதற்கட்ட பணி  தற்போது நடைபெற்று வருகிறது. கல்லூரி கட்டிட கட்டுமான  பணிகள் குறித்து ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். அதே வளாகத்தில் தாராபுரம் ஐடிஐக்கு ரூ.3 கோடி  மதிப்பில்  கட்டப்பட்டு வரும் ஆயுர்வேத ஆய்வாக கூடம் கட்டுமான  பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார் . ஆய்வின்போது தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி, தாராபுரம் நகர திமுக செயலாளர் முருகானந்தம், நகர  திமுக துணைச் செயலாளர் கமலக்கண்ணன், நகராட்சி கவுன் சிலர் ஸ்ரீதரன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.