districts

img

மேம்பால பணிகள் குறித்து ஆய்வு

நாமக்கல், ஜன. 9- பள்ளிபாளையத்தில் நடைபெறும் மேம்பால பணிகளை பார்வையிட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என ஒப்பந்த தாரர்களை அறிவுறுத்தினர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளை நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சசிகுமார், ஈரோடு உதவி கோட்ட பொறியாளர் தாமரைச்செல்வி, உதவி பொறியாளர் கபி லன் உள்ளிட்டோர் ஆர்பிபி ஒப்பந்ததாரருடன் பள்ளிபாளை யம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் மற் றும் அலமேடு பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பா லப் பணிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள்  ஆய்வு செய்த னர். மேலும் பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே உள்ள சாலையின் அருகே, மழை நீர் வடிகால் முறையாக அமைப் பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என ஒப்பந்த தாரர்களை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.