districts

img

வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி ஏப்.29இல் துவக்கம்

உடுமலை, ஏப்.20- தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு பணி ஏப்.29 ஆம் தேதி முதல் மே1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  அழிந்து வரும் அரிய விலங்கி னங்களின் பட்டியலில் வரையாடு உள்ளது. தமிழ்நாட்டின் மாநில விலங் காக உள்ள இந்த வரையாடுகளை பாதுகாக்க கூடுதலாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் வரையாடுகளை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி யினை வனத்துறை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இந்த கணக்கெடுப்பு பணி நீலகிரியில் உள்ள முக்குருத்தி தேசிய பூங்கா முதல் கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம் வரை மேற்கு தொடர்ச்சி மலைகளில் வரையாடுகள் உள்ள வாழ்விடப் பகுதிகளில் 140 இடங்க ளில் இந்த கணக்கெடுப்பு பணி மேற் கொள்ளப்பட உள்ளது. இதில் முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் வால்பாறை வனச்சரகத்தில் புல்மலை சுற்றுகளில் ஒட்டிய கேரள வனப்பகுதிகளிலும் வரையாடுகள் காணப்படுவதால் இப்பகுதியில் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி வகுப்பு அண்மை யில், ஆனைமலை புலிகள் காப்ப கம் திருப்பூர் வனக்கோட்டத்தில் நடைபெற்றது. வரையாடுகள் திட்ட இயக்குனர்  கணேசன் வழிகாட்டுத லின்படி, ஆனைமலை புலிகள் காப் பகம் திருப்பூர் வனக்கோட்ட துணை இயக்குனர்  தேவேந்திர குமார் மீனா தலைமையில் நடைபெற்றது. இதில், வரையாடுகள் திட்ட துணை இயக்கு னர் க.கணேஷ் ராம் பயிற்சி அளித் தார்.  இதில், உடுமலைப்பேட்டை வனச் சரக அலுவலர் சிவக்குமார், உயிரிய லாளர்  மகேஷ் குமார்,  வனவர்கள், வனக்காப்பாளர்கள், வன காவலர் கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் கள் ஆகியோர் பங்கேற்றனர். அனை வருக்கும் பயிற்சி மேற்கொள்வதற் கான தரவுத் தாள்கள் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கப்பட்டது.