அவிநாசி,டிச.25- அவிநாசி பகுதிகளில், அருந்ததியர் குடியிருப்பு உட்பட பல்வேறு இடங்க ளில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடம் திமுக நிர்வாகிகள் கருத்து கேட்டு ஆய்வு மேற்கொண்ட னர். அவிநாசி ஒன்றியம் 31 கிராம ஊராட்சிகள், அவிநாசி பேரூராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், அவிநாசி, திருமுருகன்பூண்டி, சேவூர் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் குழுவாக பிரிக்கப்பட்டு, அருந்ததியர் குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்கு, குடிநீர், சாக்கடை கால்வாய், வீட்டுமனை உள் ளிட்ட பிரச்சனைகள் குறித்து கேட்டறிந் துள்ளனர். அதேபோல பல்வேறு இடங் களில் பாதியுடன் நிறுத்தப்பட்ட சாலை கள், கோரிக்கை மனு அளித்தும் நிறை வேற்றப்படாமல் இருந்து வரும் வேலை களை அறிக்கையாக தயார் செய்துள்ள னர். இதனைத்தொடர்ந்து, நீலகிரி நாடா ளுமன்ற உறுப்பினர் அ.ராசா அலுவல கத்தில் தயார் செய்யப்பட்ட அறிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் அறிக்கையை சமர்ப்பித்தார். மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவ ணன் நம்பி, திருமுருகன்பூண்டி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அவிநாசி ஒன் றிய செயலாளர் சிவப்பிரகாஷ், சேவூர் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், திருமுரு கன்பூண்டி நகர மன்ற தலைவர் குமார், அவிநாசி பேரூராட்சி தலைவர் தனலட் சுமி பொன்னுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.