districts

கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

உதகை, ஜூலை 14- தேவர்சோலை அருகே கால்நடைகளை வேட்டையாடி, பொதுமக்களை அச்சமுறுத்தி வரும் புலியை கண்டறிய வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவர்சோலை பேரூ ராட்சிக்குட்பட்ட தேவன்-1 பகுதியில் கடந்த சில வாரங்களாக புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொன் றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் கூண்டு வைத்து புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கூட லூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில், வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் தேவன்-1 பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். மேலும், புலி நடமாட்டத்தை கண்காணிக்க 14 இடங்களில் கேமராக்களை பொருத்தினர். அந்த கேமராக்களை தின மும் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், இதுவரை புலி நட மாட்டம் கேமராக்களில் பதிவாகவில்லை. அது கேமராக் களில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது. இருப்பினும் வனத் துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு  பணி மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வனச்சரகர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தேவன்-1 பகுதியில் 14 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை கேமராக்க ளில் எந்த வனவிலங்குகளின் நடமாட்டமும் பதிவாகவில்லை, என்றார்.