districts

img

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகிறது ஈவிகேஎஸ். இளங்கோவன் பேட்டி

ஈரோடு, ஏப். 16- நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி  வருகிறது. இந்த முறை மோடியை வீட்டிற்கு அனுப்பி விட்டு  இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்கும் என்று ஈவிகேஎஸ்.  இளங்கோவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி யின் உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச் சர் ஸ்டாலின் சொன்னதைப் போல எத்தனை முறை வந்தா லும், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக ஜெயிக்க முடியாது. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில், உலக அரங்கில் தமிழ் மொழி அங்கீகரிக்கப்படுவதற்கு நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என்கிறார்கள். ஆனால் இவர்கள் எண்ணத்திலே இருப்பது தமிழை ஒழிக்க  வேண்டும் என்பதுதான். அண்ணாமலையைப் பொறுத்த வரை அவர் போலீஸ் அதிகாரி என்றும், பதவியிலிருந்து வந்து விட்டார் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். நான் ஆரம்பத் திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவர் போலீஸ் அதிகாரியாக இருக்கும் போது அவர் மேசைகளுக்கு கீழே  கையை விட்டு வேலை செய்து கொண்டிருந்ததால் அவரை  வேலையிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். படித்தவர், அறி வாளி என்கிறார்கள், அவருக்கு 10 மணிக்கு மேல் பிரச்சா ரம் செய்யக் கூடாது என்பது தெரியாமலிருக்கிறது. இந்த தேர்தலில் மோடியோடு அண்ணாமலையும் சேர்ந்து காணாமல் போய் விடுவார்.  கடந்த முறை நான் ஒருவன் தோற்றதினால் 40 இல் ஒன்று குறைந்தது. இந்த முறை வட்டியும், முதலுமாக 40 க்கு  40 கிடைக்கும். பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இந்தியா  கூட்டணியின் வேட்பாளர்கள் ஜெயிப்பார்கள். வட இந்தியா வில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த  முறை மோடியை வீட்டிற்கு அனுப்பி விட்டு இந்தியா கூட்டணி  ஆட்சி பொறுப்பேற்கும் என்றார்.