districts

img

பொங்கல் தொகுப்பில் கரும்பை இணைத்திடுக

சேலம், டிச.24- தமிழக அரசின் பொங்கல் தொகுப் பில் கரும்பு இடம் பெறாததைக் கண் டித்து எடப்பாடியில் கரும்பு விவசாயி கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த தொகுப்பில் பச்ச ரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை,  கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட் கள் வழங்கப்பட்டது. ஆனால், தற் போது தமிழக அரசு பச்சரிசி, சர்க்கரை, ரூ.ஆயிரம் பணம் மட்டும் பொங்கல் தொகுப்பாக அறிவித்தது விவசாயிகளி டையே பெரும் அதிருப்தியை ஏற்படுத் தியது. இந்நிலையில், பொங்கல் தொகுப் பில் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பி தமிழக முழுவதும் ஏராள மான விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால், தற்பொழுது பொங்கல் தொகுப்பில் கரும்பு அறி விக்காததால், கரும்பு சாகுபடி செய்து  விவசாயிகள் பெருமளவில் பாதிப்புக் குள்ளாவார்கள். இந்நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி சுற்று வட்டார பகுதியில் சுமார் ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிரிட் டுள்ள விவசாயிகள் பூலாம்பட்டி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொங் கல் தொகுப்பில் கரும்பை சேர்க்க வலி யுறுத்தி, விவசாயிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கையில் கரும்புகளை ஏந்திப்படி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.