districts

img

அமராவதி சர்க்கரை ஆலையை அடுத்த அரவை பருவத்துக்குள் சீரமைக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜூன் 22 – திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டு றவு சர்க்கரை ஆலையை அடுத்த அரவைப் பருவத்துக்குள் முழுமையாக சீரமைக்க, தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை யில், அமராவதி மற்றும் பிஏபி ஆயக்கட்டு பகுதி மற்றும் பழநி, தாராபுரம் தாலுகா ஆயக்கட்டு பகுதிகளில் விளையும் கரும்பு  அரவை செய்யப்படுகிறது. கடந்த 20 ஆண்டு களாக இந்த ஆலையை புனரமைக்க எந்த விதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதனால் தற்போது, முழுமையான அரவைத் திறனை இழந்து, மிகக்குறைந்த அளவே கரும்பு அரவை செய்யப்படுகிறது.  கரும்பு அரவை பருவத்தில் ஆலையில்  இயந்திரப்பழுது ஏற்படுவதால் வெட்டப்பட்ட கரும்பு காய்ந்து விவசாயிகளுக்கு பெரும்  இழப்பீடு ஏற்படுகிறது. இதனால் விவசாய  தொழிலாளர்கள், வாடகை வாகன உரிமை யாளர்கள், ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்ற னர். எனவே தமிழக அரசு அடுத்த அரவை பரு வம் வருவதற்குள்,

ஆலையை முழுமையாக  புனரமைத்து, விவசாயிகள் விளைவித்த கரும்பை முழுமையாக அரவை செய்ய கூடு தல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  தேர்தல் வாக்குறுதியான கரும்பு டன் ஒன் றிற்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு  விவசாயிகளுக்கு 15 நாட்களில் பணம் வழங்க  வேண்டும். ஆலை தொடர்ந்து இயங்க அடுத்த ஆண்டுக்கான கரும்பு மிகக் குறைந்த  அளவிலேயே பதிவாகி உள்ளது. எனவே பதிவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு கூட்டு றவு சங்கங்களில் உடனடியாக பயிர்கடன் வழங்க வேண்டும். ஆலையில் அலுவலர் முதல் கடைநிலை  ஊழியர் வரை காலிப்பணி யிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.  ஆலைத் தொழிலாளர்களுக்கு மாதம்தோ றும் சம்பளம் வழங்க வேண்டும். தொழிலா ளர் நலச்சட்டங்களை முறையாக அமல்ப டுத்த வேண்டும். கரும்பு வெட்டும் தொழிலா ளர்களுக்கு வாரந்தோறும் வெட்டுக்கூலி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அமரா வதி சர்க்கரை ஆலை முன்பாக வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  விவசாயிகள் சங்க நிர்வாகி எம்.எம்.வீரப் பன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத் தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வேல்முருகன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி, மாவட்ட செயலாளர் ஆர்.குமார், ஒன்றியத் தலைவர் ராஜகோபால், சர்க்கரை ஆலையின் தொமுச செயலாளர் சேகர், அண்ணா தொழிற்சங்க தலைவர் கருப்புச்சாமி உள் ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.