அவிநாசி, பிப்.2- அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தில் அடிப்படை வச திகள் இன்றி பொதுமக்கள் தவித்த னர். கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற கோவில் ஸ்தலங்களில் அவி நாசி லிங்கேஸ்வரர் கோவிலும் ஒன்று. இந்நிலையில், 14 ஆண்டுக ளுக்குப் பிறகு கோவில் கும்பாபிஷே கம் நடத்தப்பட்டு முடிந்துள்ளது. இந்த கும்பாபிஷேகத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் எந்த வித அடிப் படை வசதிகளும் செய்யப்படவில் லை. தன்னார்வலர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, பொதுமக்களுக்கு குடிநீர் முதல் பழ ரசம், பிஸ்கட் பாக் கெட்டுகள், ட்ரோன் மூலம் தீர்த்தம் தெளிப்பு, மொபைல் கழிப்பறைகள் போன்றவை செய்து கொடுத்துள்ள னர். இருப்பினும் காலை கும்பாபி ஷேகம் நடைபெறும் நேரத்தில் கைக் குழந்தைகள் எடுத்து வந்த தாய்மார் கள் தாய்ப்பால் ஊட்டுவதற்கு உண் டான அறை அமைக்கவில்லை. பொது இடங்களில் குடிநீர் வசதி ஏற் பாடு செய்யப்படவில்லை. அதிக ளவில் கூட்டம் வந்ததாதல், காவல் துறையினரே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு திணறும் சூழ்நிலை ஏற்பட் டது. கூட்ட நெரிசல்களில் பலருக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டு அவதி யில் தவித்தனர். அதேபோல தனியார் மருத்துவம னைகள் தன்னார்வ அமைப்பு மூலம் மருத்துவ சேவைகள் அமைக்கப்பட் டது. தன்னார்வ அமைப்புகள் சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் கோவில் கும் பாபிஷேக பணிகள் செய்தனர்.கோவில் கும்பாபிஷேகத்தில், ஒரு சிலருக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட் டுள்ளனர். கும்பாபிஷேகம் நடைபெ றும் முந்தைய தினம் கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழு தலை வர் ஆகியோரை அதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளூர் மக்களுக்கு பாஸ் வழங்காமல் இழுத்தடிப்பு செய் ததை கண்டித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். அதேபோல பத்திரிக்கையாளர்க ளுக்கு பாஸ் வழங்காமல் காலை முதல் இரவு வரை கோயில் நிர்வாகத் தில் காக்க வைத்தனர். ஒரு கட்டத் திற்கு மேல் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் பாஸ் வழங்குவது என்று முடிவு எடுத்ததால், பத்திரிக்கையா ளர்கள் அனைவருக்கும் பாஸ் வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதன் பிறகு துண்டு சீட்டில் அச்சடிக்கப்பட்டு அதனை பாஸாக வைத்துக் கொள்ளுமாறு விநியோ கம் செய்தனர். முறையாக அழைப்பு வழங்காமல் பேரூராட்சி நிர்வாக மும், முடிந்தவரை காவல் துறையும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை நடத் திக் கொடுத்துள்ளனர். எதிர்வரும் காலங்களில் இதுபோல் நடைபெறா மல் இருக்க மாவட்ட நிர்வாகம் கூடு தல் கவனம் செலுத்தி ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள னர். முஸ்லிம் மதத்தினர் உதவி: ஜே.ஏ.எம்.&கே நகைக்கடை உரிமையாளர் பத்தாயிரம் தண்ணீர் பாட்டில்கள், 5000 பேருக்கு பழரசங் கள் போன்றவை வழங்கியுள்ளனர். அதேபோல முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு உதவிக்காக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து வைத்தனர்.