தருமபுரி, ஜூன் 13- சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பால், நொனங் கனூர் பழங்குடியின மக்கள் இறந்தவரின் சட லத்தை எடுத்து செல்ல முடியாமல் அவதிக் குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பட்டுகோனம்பட்டி ஊராட்சிக்குட்பட் டது நொனங்கம்பட்டி. இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பழங்குடியன குடும்பங் கள் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடி மக்களுக்கென இந்த கிராமத்தின் அருகே 1 கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு அமைந் துள்ளது. இந்த சுடுகாட்டின் பரப்பளவு சுமார் 1 ஏக்கருக்கு மேல் உள்ளது. இந்த சுடுகாட்டை யும், சுடுகாட்டு பாதையையும் சுமார் 100 ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருகின்ற னர். இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன் குறுகலாக இருந்த சுடுகாட்டு பாதையை, பழங்குடி மக்களின் சொந்த பணத்தை கொண்டு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மண்சாலை அமைத்தனர். இந்த மண்சாலை யின் மூலம் இறந்தவரின் சடலத்தை அமரர் ஊர்தியின் மூலம் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று அடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில், சுடுகாட்டு பாதையின் ஒரு பகுதியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகிறார். இத னால், கிராம மக்கள் இறந்தவரின் சடலத்தை பல கிலோமீட்டர் சென்று சுற்றி சுடுகாட்டுக்கு எடுத்துவரும் நிலை உள்ளது. இந்நிலை யில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுடுகாட்டு சாலையை மீட்டு தரவேண்டும் என தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் அதிகரிகளி டம் முறையிட்டனர். இதனையடுத்து, பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியரிடம் 4 முறையும், அரூர் கோட்டாட்சியரிடமும் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனாலும், சுடு காட்டு பாதை ஆக்கிரமிப்பை மீட்க நடவ டிக்கை இல்லை. இதனிடையே சுடுகாட்டு பாதையை மீட் டுத்தர வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கடந்த வாரம் அரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொ டர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரு மாதத்தில் சுடுகாட்டு பாதையை மீட்டுதருவ தாக கோட்டாட்சியர் உறுதியளித்தார்.
இந்நிலையில், செவ்வாயன்று நொனங்க னூர் கிராமத்தை சேர்ந்த மாரியின் மனைவி வெள்ளையம்மாள் (87) என்பவர் வயது முதிர் வின் காரணமாக இறந்தார். இறந்தவரின் சட லத்தை, பழைய சுடுகாட்டு சாலையில் கொண்டு செல்ல, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியரிடம் நொனங் கனூர் கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக் கப்பட்டது. அதன் அடிப்படையில், நொனங்க னூர் கிராமத்தில் இறந்த வெள்ளையம்மாள் சடலத்தை அமரர் ஊர்தியில், சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். சுடுகாட்டு பாதையை ஆக் கிரமிப்பு செய்து, விவசாய பயிர் செய்யப் பட்டதால், சடலத்தை அமரர் ஊர்தியில் கொண்டு செல்ல முடியாமல் சடலத்தை இறக்கி, பயிரிடப்பட்ட வரப்பில் எடுத்து சென் றனர். ஒருவழியாக வருவாய்த்துறை காவல் துறை பாதுகாப்பின் மூலம் இறந்தவரை அடக் கம் செய்யப்பட்டது. முன்னதாக, தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அம்பு ரோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் தி.வ.தனுசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் சி.வஞ்சி, வட்ட தலைவர் எஸ்.தீர்த்த கிரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுடுகாட்டு சாலையை பார்வையிட்டனர். அரூர் கோட் டாட்சியர் கொடுத்த வாக்குறுதியின்படி ஆக் கிரமிப்பு செய்யப்பட்ட சாலையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள் ளது.