திருப்பூர், அக்.29- தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தில் நவீன தீண்டாமையை வேரறுப்பதற்கான முறையில் அக் டோபர் 22 ஆம் தேதி துவங்கிய சாலைப் பணியாளர் சங்கத்தின் தொடர் போராட்டம் வெற்றி பெற்றது. தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சாலைப் பணியாளர்களிடம் ஆதிக்க மனப்பான்மையுடனும், சாதிய வன் மத்துடனும் நடந்து கொண்டு நவீனத் தீண்டாமையை அரசு அலுவலகத் தில் கடைப்பிடித்தார். இதை கோட் டப் பொறியாளரிடம் முறையிட்டும் பிரச்சனைக்குத் தீர்வு காண நடவ டிக்கை எடுக்காத நிலையில், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி முதல் காத் திருப்புப் போராட்டத்தை சாலைப் பணியாளர் சங்கத்தினர் தொடங்கி னர். ஆறு நாட்களாகப் போராட்டம் நீடித்த போதும் நிர்வாகம் தீர்வு காண முன்வராத நிலையில், ஏழாம் நாள் திங்களன்று இப்போராட் டத்தை தீவிரப்படுத்துவது என்று சாலைப் பணியாளர் சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் சாலைப் பணியாளர் தாராபுரம் கோட்ட அலு வலகத்திலும், திருப்பூரில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் அலுவ லகத்திலும் முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். இந்நிலையில் திங்களன்று கண் காணிப்பு பொறியாளர் நேரடியாக தாராபுரம் கோட்டப் பொறியாளர் அலு வலகத்திற்கு வருகை தந்து, கோட்ட பொறியாளரும், உதவி கோட்டப் பொறியாளர்களும் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் தாராபுரம் கோட்ட நிர்வாகிக ளோடு காலை 11 மணியளவில் பேச்சு வார்த்தை துவங்கப்பட்டது. இக்கூட் டம் மாலை ஐந்து மணி வரையிலும் நடைபெற்றது. பிரச்சனைகளுக்குத் தீர்வு காண் பதற்கு கோரிக்கைகளை நிறைவேற் றுவதற்கு எழுத்து பூர்வ உடன்ப டிக்கை ஏற்படுத்தப்பட்ட து. இதன் அடிப்படையில் போராட்டம் வெற்றி கரமாக நிறைவு செய்யப்பட்டது. இப் போராட்டத்தை உறுதியுடன் நடத்திய தில் பங்கேற்ற தாராபுரம் கோட்ட சாலைப் பணியாளர் சங்க நிர்வாகி கள், சாலைப் பணியாளர்கள், மாநிலம் முழுவதும் வந்து போராட் டத்தில் பங்கேற்றோர், ஆதரவு தெரி வித்த அரசு ஊழியர் சங்கம் ஆகியோ ருக்கு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.