districts

img

உதவித்தொகை: மாற்றுத்திறனாளிகள் சங்க போராட்டம் வெற்றி

ஈரோடு, பிப்.5- உயர்த்தப்பட்ட உதவித்தொகை வழங்கக்கோரி அந்தியூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற் றுத்திறனாளிகளின் போராட்டம்  வெற்றியடைந்துள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட் டத்திற்குட்பட்ட பர்கூர் மலை. இங்கு  சுமார் 300 மேற்பட்ட மாற்றுத்திறனா ளிகள் மாதந்தோறும் அரசு உதவித் தொகையாக பெற்று வந்தனர். வட் டாட்சியர் அலுவலகத்திலிருந்து வங்கி மூலம் இந்த உதவித்தொகை பய னாளிகளுக்கு அனுப்பி வைக்கப் படும். பயனாளிகளின் வங்கிக் கணக் கில் செலுத்தப்படும். இந்த உதவித் தொகையை வங்கியின் முகவர்  மூலம் வசிப்பிடத்திற்கே சென்று  வழங்கப்படுகிறது.  இவ்வாறு கடந்த டிசம்பர் மாதம் வரை ரூ.1000 உத வித்தொகை பெற்று வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.500 உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதல்வர் ஆணை யிட்டார். இதன்படி கடந்த ஜனவரி  முதல் ரூ.1,500 உதவித்தொகை வழங் கப்படுகிறது. ஆனால் பர்கூர் மலை வாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வழக் கம் போல் ரூ.1000 மட்டுமே முகவர்  வழங்கினார்.  இதுகுறித்து தமிழ்நாடு அனைத் துத்துறை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் மாவட்ட தலைவர் சாவித்ரி தலைமையில் அந்தியூர் வட் டாட்சியர் அலுவலகத்தில் முறை யிடப்பட்டது. அந்தியூர் வட்டார சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மனு எழுதி கொடுங்கள்,

முகவரை அழைத்து பிரச்சனைக்கு தீர்வு காண லாம் எனக்கூறியுள்ளார். வட்டாட்சி யர் கேட்டுக் கொண்டபடி மனு எழுதி முடிப்பதற்குள் வட்டாட்சியர் சென்று விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட மக் கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளின் உறுதியான போராட்டத்தால் இரவு 7 மணியளவில் குறைத்து வழங்கப் பட்ட ரூ.500 பயனாளிகளுக்கு வழங் கப்பட்டது. அதன் பிற்கு போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்ற னர். இதனையடுத்து பர்கூர் மலை யில் சனியன்று சாவித்திரி தலைமை யில் ஏமாற்றப்பட்ட மாற்றுத்திறனா ளிகள் வங்கி கிளையில் சென்று  கேட்டபோது, உதவித்தொகை உயர்த் தப்பட்ட விபரம் அப்பணியில் இருந்த வருக்கு தெரியவில்லை என்று கூறி  சமாளித்தனர். உங்களுக்கு சம்பள உயர்வு போட்டிருந்தால் தெரிய வில்லை என்று குறைவாக வாங்கிக்  கொள்வீர்களா என்றும், விபரம் தெரி யாதவர்களை ஏன் வேலைக்கு வைத் திருக்கிறீர்கள் என்று பலவாறு கேள்வி  எழுப்பிய பிறகு விடுபட்ட பயனாளிக ளுக்கு ரூ.500 உதவித்தொகை வழங் கப்பட்டது.