தாராபுரம், மே 25 - தாராபுரம் பகுதி சிறு குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாச னம் அமைக்க மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். தாராபுரம் தோட்டக்கலை உதவி இயக்குநர் எஸ்.திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தாராபு ரம் வட்டாரத்தில் அதிக அளவில் தோட்டக்கலை பயிர்கள் சாகு படி செய்யப்பட்டு வருகிறது. இதில் இருக்கக்கூடிய தண் ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் சாகுபடி செய்து லாபமடைய சொட்டு நீர் பாசன திட்டம் ஆண்டு தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 228 ஹெக்டேர் நிலங்களுக்கு ரூ. 1 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் அமைக்காத விவசாயிகள் தோட்டக்கலைதுறை மூலம் மானியத்தில் புதிதாக அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சொட்டு நீர் பாச னம் அமைத்துள்ள விவசாயிகள் அவை அமைக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியிருந்தால் மானியத்தில் பக்கவாட்டு குழாய் களை புதுப்பிக்கலாம். இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானி யமும் வழங்கப்படுகிறது. புதிதாக ஆழ்துறை கிணறு அமைக்க ரூ. 25 ஆயிரம் அல்லது மின் மோட்டாருக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் தரைநிலை நீர்தேக்க தொட்டி அமைக்க ரூ. 40 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விவசாயி கள் சிட்டா, அடங்கல், நிலவரைபடம், சிறு குறு விவசாயி சான்றுடன் தாராபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக் குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.