districts

img

பொதுத்துறை நிறுவனங்களின் அவசியத்தை பொதுமக்களிடம் விளக்கி ஆதரவு திரட்டுக!

சென்னை, மே 30- பொதுத்துறை நிறுவனங்க ளின் அவசியத்தை பொதுமக்களி டம் தெரிவித்து அவர்களின் ஆத ரவை திரட்ட வேண்டும் என்று   அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் சுபாஷினி அலி கேட்டுக்கொண் டார். மே 30 சிஐடியு அமைப்பு தினத் தையொட்டி “ஐசிஎப், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவ னங்களை பாதுகாப்போம், சமூக  நீதி காப்போம், தேசத்தை பாது காப்போம்’’ என்ற தலைப்பில் ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் சிறப்பு கூட்டம் சென்னையில் திங்களன்று  (மே30)நடைபெற்றது. நிகழ்ச் சிக்கு சங்கத்தின் தலைவர் எஸ். ராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில் சுபாஷினி அலி பேசியதா வது,பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால் மட்டுமே ஓய்வூதியம், சமூக நீதி, பணி பாதுகாப்பு இருக் கும். தனியார் மயமானால் 12 மணி நேர வேலையும், வாரத்தின் 7 நாட்களும் மிகவும் குறைந்த ஊதி யத்தில் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படும். பணி பாதுகாப்பு இருக் காது. நிர்வாகத்துடன் தொழிற்சங் கங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. தனியார் துறைகளில் ஒப்பந்த நிறுவனங்களில் பணி புரியும் பெண்களுக்கு பணி பாது காப்பு இருக்காது, பல இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளா கிறார்கள். பல மக்களவை உறுப்பினர்கள் தனியார்மயத்திற்கு ஆதரவாக பேசு கிறார்கள். சிலர் மோடி நல்லவர்  ஆனால் தனியார்மயம் மோசமா னது என கூறுகிறார்கள். இடதுசாரி கட்சி உள்ளிட்ட ஒரு சில மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே தனியார் மயத்திற்கு எதிராக குரல் கொடுக் கிறார்கள். பொதுத்துறை நிறுவ னங்கள் இல்லை என்றால் மாற்றுத் திறனாளி, பழங்குடியின, பிற்படுத் தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வேலை வாய்ப்பும், சமூக நீதியும் கேள்விக்குறியாகும். இனி இந்தியன் கோச் நிறுவனம் என்பது அதானி கோச் நிறுவனமாக மாறும். இந்தியன் ஐஆர்(இந்தி யன் ரயில்வே) என்பது ஏஆர் (அதானி ரயில்வே) என மாற்றப் படும். அதானி பொதுத்துறை நிறு வன பங்குகளை வாங்க ஸ்டேட் வங்கி நம்முடைய பணத்தை கட னாக கொடுக்கும். அதை தள்ளு படி செய்ய மோடியும், அமித்ஷா வும் உள்ளனர்.

முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு சமம்

ரயில்பெட்டி இணைப்பு தொழிற் சாலை என்பது  நம்முடைய அம்மா, அப்பா போன்றது. அது தனியார் மய மானால் நாம் தாய் தந்தையை ஆத ரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு சமமாகும். எனவே போராட்டத் தின் மூலம் மட்டுமே நம்முடைய நிறுவனத்தை பாதுகாக்க முடியும். ஆனால் நாம் நிறுவன வளாகத்திற் குள் தனியார்மயம் கூடாது எனக் குரல் கொடுக்கிறோம். நிறுவ னத்தை விட்டு வெளியே சென்ற வுடன் தொழிலாளி என்பதை மறந்து விடுகிறோம். பொதுத்துறை நிறுவனங்கள் இல்லை என்றால் இந்தியா  இல்லை. பொதுத்துறை நிறுவனங் களுக்கு உள்ள பல்லாயிரம் கோடி  ரூபாய் மதிப்புடைய சொத்துக் களை கொள்ளையடிக்க அம்பானி யும், அதானியும் துடித்துக் கொண் டிருக்கிறார்கள். எனவே பொதுத் துறை நிறுவனங்களில் அவசி யத்தை தேவையை மக்களிடம் எடுத்துக்கூறி அவர்களையும் நம்மு டைய போராட்டத்திற்கு ஆதரவாக திரட்ட வேண்டும். அதேபோல் ஒப்பந்த தொழிலாளர்களையும் திரட்ட வேண்டும். எந்த ஓய்வூதியம் பெறாத விவசாயி எப்படி தனியார் மயத்திற்கு எதிராக போராடினார் களோ, அதேபோல் நம்முடைய போராட்டம் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கும் போராட்டமாக மாற  வேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னதாக, ஐசிஎப் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அசோசி யன்களின் தலைவர்களுடன் இன் றைய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி தனியார் மயமாக்கப்படுகிறது, சீர ழிக்கப்படுகிறது என்பது குறித்து கலந்துரையாடினார். இதில், கே.கோபிநாத், சண்மு கம் (ஐஆர்டிஎஸ்ஏ), அனைத்து சங்க போராட்ட குழு ஒருங்கி ணைப்பாளர் பி.மோகன்தாஸ், செந்தில்குமார் (என்எப்ஐஆர்), சுந்தர் (பிஎம்எஸ்),ஏ.கே.தனேஷ் குமார் (அண்ணா தொழிற்சங்கம்), கே.ராமமூர்த்தி (ஏஐஒபிசி), சுரேஷ் (இந்தியன் சூபர்வேஷன் கவுன்சில்) ஆகியோரும் பேசினர்.  முன்னதாக செயல் தலைவர் வி. எம்.கிருஷ்ணகுமார் வரவேற்றார். பொதுச்செயலாளர் பா.ராஜராமன் நன்றி கூறினார்.