தருமபுரி, அக். 12- படிப்பு வேறு, கற்று அறிவது வேறு, கற்றறிந்த மனிதர்கள் பண்பா ளர்களாக இருப்பார்கள் என தருமபுரி புத்தக திருவிழா கருத்தரங்கில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உரையாற்றினார். தருமபுரியில் கடந்த 4 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கருத்தரங்கம் நடை பெற்று வருகிறது. கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா தலைமை வகித்தார். இதில், பங்கேற்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ‘மானுடம் வெல்ல கல்வி’ என்னும் தலைப்பில் பேசுகையில், “ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், சாலைகள், விமான நிலையங்கள், தகவல் தொடர்புகள் ஆகியவற்றை வைத்து கணக்கிடப் படுகிறது. ஆனால், அந்த நாட்டு மக்கள் சமத்துவமாக வாழ்கிறார் களா? மகிழ்ச்சியாக வாழ்கிறார் களா? ஒற்றுமையாக வாழ்கிறார் களா? என்பதையும் பார்க்க வேண் டும். இன்றைய மாணவர்கள் எல் லாவற்றிலும் முதலிடம் வரவேண் டும் என்று எண்ணக் கூடாது. தோல்வி களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக் குவமும் அவர்களுக்கு இருக்க வேண்டும். படிப்பு வேறு, கற்று அறி வது வேறு. கற்றறிந்த மனிதர்கள் பண்பாளர்களாக இருப்பார்கள், அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வார்கள். நேற்று இருந்த சமூகம் போல் இன்றைய சமூ கம் இருக்கக் கூடாது. மானுடம் வெல்ல வேண்டும் என்றால் மக்கள் அறிவோடு பாசத்தோடு, பண்போடு, பகுத்துண்ணும் நிலையோடு இருக்க வேண்டும்” என்றார். முன்னதாக தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மா. சிங்காரவேல் வரவேற் றார். முடிவில் நூலகர் இரா. மாதேஸ் வரன் நன்றி கூறினார். கவிஞர் ஆதி முதல்வன் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்து வழங்கினார்.