திருப்பூர், ஏப்.13- திருப்பூரில் உள்ள அரசு மருத்துவ மனைகளின் அடிப்படை பிரச்சனைக ளுக்கு உடனடியாக தீர்வு காண வேண் டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ மனைகளை ஆய்வு செய்ய, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு முடிவு செய்தது. அதன் படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு குறித்து மாதர் சங்கத் தினர் செய்தியாளர்களிடம் தெரிவிக் கையில், திருப்பூர் மாவட்டத்தில் திருப் பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை உட்பட பல்வேறு ஆரம்ப சுகா தார நிலையங்கள் ஆய்வு செய்யப்பட் டது. இந்த ஆய்வில் 38 பேர் பங்கேற்ற னர். திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தலைக்காயம், சிறுநீரகம், கேன்சர், நரம்பியல் ஆகிய வற்றுக்கு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவை. தின சரி ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச் சைக்கு வந்து செல்வதால் இம்ம மருத்து வமனையில் செவிலியர்கள் அதிகப் படுத்த வேண்டும். தூய்மை பணியா ளர்கள், சலவைத் தொழிலாளர்கள், பாதுகாவலர் என அனைவரும் ஒப்பந்த ஊழியர்களே பணியில் உள்ளார்கள். அவர்களை நிரந்தரமக்கப்பட வேண் டும். பிரேத பரிசோதனை கூடத்திற்கு குறைந்தது, நிரந்தர பணியாளர்கள் 5 நபர்களையாவது நியமனம் செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை கூடத் தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு குடிநீர், கழிவறை, குளியலறை போன்ற அடிப்படைத் தேவைகளையும், இங்கு வரும் பொதுமக்களுக்கும் இதுபோன்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அவசர ஊர்திகளை இயக்க ஓட்டுநர் களை அதிகப்படுத்த வேண்டும். பிரே தங்களை எடுத்துச் செல்ல ஸ்ட்ரெச் சர்கள் அதிகப்படுத்த வேண்டும். ஊத் துக்குளி அரசு மருத்துவமனையில் 60 படுக்கை வசதிக்கேற்ப கட்டிடங்களை விரிவுபடுத்த வேண்டும்.
பொங்கலூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் அவசர ஊர்தி ஓட்டு நர் நிரந்தர பணியாளராக நியமிக்க வேண் டும். மாவட்ட முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய வற்றில் மருத்துவர்கள், மருத்துவ உப கரணங்கள் பற்றாத நிலையில் உள்ள தால், சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி யாக நடவடிக்கை எடுத்து மருத்துவர் களை நியமிக்க வேண்டும். அடுத்தக் கட்டமாக இக்கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி நடவ டிக்கை எடுக்க வலியுறுத்துவோம். தவ றும்பட்சத்தில் தொடர் போராட்டங் களை முன்னெடுப்போம் என்று தெரி வித்தனர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பவித்ராதேவி, செயலாளர் கே. சரஸ்வதி, துணைத்தலைவர் பானுமதி, மாவட்ட நிர்வாகிகள் லட்சுமி, பானுமதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் மினி, நிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.