districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்ட பணிகள் ஆய்வு

பள்ளிபாளையம், ஜூன் 18- சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்ட பணிகளை பள்ளிபாளையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  ஒன்றிய அரசு, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் ரூ.6,448.24 கோடியில், சென்னை -- கன்னியாகுமரி தொழில் தட திட்டத் தில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 16 மாநில நெடுஞ்சாலைகளை 590 கி.மீ., துாரத்திற்கு மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பள்ளிபாளையத்தில் கடந்த ஒன் றரை ஆண்டுகளுக்கு மேலாக  மேம்பாலம் உள்ளிட்ட பணி கள் நடைபெற்று வருகிறது. இதனால், பிரதான சாலைகளில் பணிகள் நடைபெறுவதால், மாற்றுப் பாதையில் அனைத்து  வாகனங்களும் திருப்பிவிடப்பட்டுள்ளன.  இந்நிலையில், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெறும் மேம்பாலம் கட்டுமான பணிகளை, சேலம் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சி.சசிகுமார், உதவி கோட்ட பொறியாளர் தாமரைச்செல்வி, உதவி பொறி யாளர் கபிலன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பரிசல் துறைகளில் கட்டண உயர்வு திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பென்னாகரம், ஜூன் 18- பண்ணாவாடி, கோட்டையூர் பரிசல் துறைகளில் உயர்த்தியுள்ள பரிசல் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரி யூர் ஒன்றிய குழு மற்றும் கிளைச் செயலா ளர் கூட்டம் சனியன்று, ஏரியூரில் நடைபெற் றது. குப்புசாமி தலைமை வகித்தார். கூட் டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் இரா.சிசுபாலன், ஒன்றிய செயலாளர் என்.பி.முருகன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். இக்கூட்டத்தில், சமீபத்தில் ஏரியூர் ஒன்றி யம், பண்ணாவாடி,  கோட்டையூர் பரிசல்  துறைகளில் நடைபெற்ற ஏலத்தில் முறை கேடுகள் நடைபெற்றுள்ளன. இதனால், ஊராட்சி ஒன்றியத்துக்கு வரவேண்டிய பல  லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த  ஏலத்தின் மூலம் பரிசல் துறையில் நபர்கள்  பயணிக்க கட்டணம் ரூ.15லிருந்து ரூ.20 ஆக வும், இருசக்கர வாகனங்களை ஏற்றிச் செல்ல கட்டணம் ரூ.30லிருந்து ரூ.40 ஆகவும் உயர்த் தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண் டும். ஏலத்தில் நடைபெற்ற முறைகேடு களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், காவிரி உபரி நீர் திட்டத்தை அம லாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  சார்பில் நடைபெறவுள்ள நடைபயணத்தில் பெரும் திரளாகப் பங்கேற்பது என கூட் டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பெண்ணிடம் செல்போன் திருட முயற்சி

கோவை, ஜூன் 18- கோவை பேருந்து நிலையத்தில் பெண் ணிடம் செல்போன் திருட முயற்சித்தவர் களை போலீசார் கைது செய்தனர்.  கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த வர் சுஜித்ரா (22). இவர் கோவையில் உள்ள  மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து  வருகிறார். இந்நிலையில், சுஜித்ரா தனது  சொந்த ஊருக்கு செல்வதற்காக காந்திபுரத் தில் இருந்து பேருந்தில் ஏறினார். அப்போது  அவரது அருகில் நின்றிருந்த 2 இளைஞர் கள், கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுஜித்ரா பேக்கில் வைத்திருந்த செல்போனை திருடி தப்பி செல்ல முயன்றனர். இதையறிந்த சுஜித்ரா சத்தம் போட்டார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் இருவரையும் பிடிக்க  முயற்சித்தனர். ஆனால், ஒருவர் தப்பிவிட ஒருவர் மட்டும் பிடித்து காட்டூர் காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், செல்போன் திருடிய ஊட்டியை சேர்ந்த ரித் திக் (22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். தப்பி ஓடிய சஞ்சய்  என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகரை சேர்ந்தவர் சயத் முஸ்தபா (20).  கல்லூரி மாணவர். மேலும் இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பா ளராக உள்ளார். சயத் முஸ்தபா கோவையில் நடைபற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத் தில் கலந்து கொண்டார். இதன்பின் ஊருக்கு செல்வதற்காக இரவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சயத் முஸ்தபா வின் செல்போனை பறித்துக் கொண்டு தப்ப  முயன்றார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் செல்போன் பறித்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த லோகேந்திர சிங் (21) என்பவரை கைது செய்தனர்.

குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஜூன் 18- இரண்டாம் காலாண்டிற் கான மின் வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 21 ஆம் தேதி நடைபெற உள் ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் கழகம், ஈரோடு மண் டலம் மற்றும் அதன் பகுதி களுக்கு உட்பட்ட பிற அலுவ லகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணி யாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக் களை பெறவும், உடனடியாக தீர்வு காணவும் மூன்று பேர்  கொண்ட குழு அமைக்கப்பட் டுள்ளது. அக்குழு, காலண் டிற்கு ஒரு முறை ஈரோடு மண் டல அலுவலகத்தில் கூடி  குறைகளை நேரில் கேட்டு, மனுக்களை பெற்று, உரிய நிவராணம் வழங்கப்பட உள் ளது. அதன்படி நடப்பாண் டின் இரண்டாம் காலாண்டிற் கான மின் வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 21 ஆம் தேதியன்று காலை 11  மணிக்கு மின் வாரிய ஆய்வு  மாளிகையில் நடைபெற உள் ளது. அதுசமயம் மின் வாரியத் திலிருந்து ஓய்வு பெற்ற அலு வலர்கள், பணியாளர்கள் தங்களின் குறைகளை தீர்த் துக் கொள்ளுமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, ஜூன் 18- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவ சாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வரு கிறார்கள். இந்த அங்கா டிக்கு சனியன்ற 2,500 கிலோ பட்டுக்கூடு கொண்டு வரப் பட்டன. இதில் ஒரு கிலோ  பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.533க்கும், குறைந்தபட்ச மாக ரூ.296க்கும், சராசரி யாக ரூ.449.16க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட் சத்து 22 ஆயிரத்து 915க்கு வர்த்தகம் நடைபெற்றது.

அரசுப்பள்ளிகளுக்கு 52 கழிப்பறைகள் ரோட்டரி சங்கத்தினரின் முன்னெடுப்பு

திருப்பூர், ஜூன் 18 - திருப்பூர் ரோட்டரி சங்கம் வடக்கு சார்பாக 2022-23க்கு  தலைவராக இருப்பவர் எஸ்.ரவிசங்கர். இவரது தலைமை யின் கீழ் செயல்படும் ரோட்டரி சங்கத்தினர் கடந்த மாதம் முதல் ஒரு திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். அதாவது திருப்பூர் நகராட்சிப் பள்ளிகளான மாஸ்கோ நகர், மண்ணரை, கருமாரம்பாளையம் பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு கழிப் பறை மிகவும் மோசமாக இருந்ததைக் கவனித்தவர்கள், இந்த பள்ளிகளுக்கு 52 நவீன கழிப்பறைகளை ரூ. 52 லட்சம் செல வில் கட்டி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு வடக்கு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அவினாசி, காந்தி நகர் ரோட்டரி, தெற்கு ரோட்டரி, ஸ்மார் சிட்டி ரோட்டரி உறுப்பினர் களும் நன்கொடையளித்து வருகின்றனர். இந்த நன்கொடை யாளர்களை கவுரவிக்கும் வகையில் ஞாயிறன்று வடக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இந்த 52 கழிப்பறைகளின் திறப்புவிழா வரு கிற ஜூன் 28 அன்று நடைபெறவுள்ளது. இந்த திட்டத்தின் அதி முக்கியமான சிறப்பு என்னவென் றால், இந்த கழிப்பறைகளில் மூன்று ஆண்டுகளுக்கு எலக்ட் ரிக் மோட்டார் மூலம் பராமரிக்கும் பொறுப்பினையும் வடக்கு ரோட்டரி சங்கமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசின் தவறான கொள்கை பெரும் நெருக்கடியில் பனியன் தொழில்

திருப்பூர், ஜூன் 18- மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தவறான பொரு ளாதார கொள்கைகளால் பனியன் தொழில் கடும் நெருக்கடி யில் சிக்கி இருப்பதாக ஏஐடியுசி குற்றம் சாட்டியுள்ளது. ஏஐடியுசி பனியன் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்  பி.என்.ரோடு சங்க அலுவலகத்தில் சங்கத்தின் துணைத்தலை வர் எம்.ரவி தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட கவுன்சில் தலைவர் எம்.மோகன், சங்கத்தின் பொதுச்செயலா ளர் என்.சேகர், பொருளாளர் எஸ்.செல்வராஜ் செயலாளர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.  திருப்பூர் பனியன் தொழில் ஒன்றிய அரசின் தவறான  பொருளாதார கொள்கை காரணமாக பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. தொழிலாளர்கள் வேலை இன்றி கஷ்டப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய சிறு குறு தொழில் கள் கடும் நெருக்கடியில் சிக்குண்டு கிடக்கிறது. கார்ப்பரேட் நலனில் மட்டுமே அக்கறை செலுத்துகிற ஒன்றிய பாஜக அரசு சிறு குழு தொழில்களையும் பனியன் தொழில்களையும் பாது காக்க போர்க்கள வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பனியன் தொழிலாளர்களுக்கு ஒப்பந்த சம்பளம் வழங்கு வதை உறுதிப்படுத்த வேண்டும். ஒப்பந்தத்தை அனைத்து கம் பெனிகளிலும் அமலாக்குவதை உறுதிப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் நகர்புற வாழ்விட மேம் பாட்டு திட்டத்தின்படி பனியன் தொழிலாளர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வீடு அனைவருக்கும் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாளை சிக்கண்ணா கல்லூரியில்   இரண்டாம் கட்ட கலந்தாய்வு

திருப்பூர், ஜூன் 18- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜூன் 20ஆம் தேதி நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு உரிய இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான இரண்டு கட்டக் கலந்தாய்வுகள் மே 31 அன்று தொடங்கி ஜூன் 15 வரை  நடைபெற்றது. இதில்  மொத்தமுள்ள 835 இடங்களில் 87 சதவீத இடங்கள் நிரம்பி யுள்ளன. அறிவியல் பாடப் பிரிவுகளில் கணிதம் பாடப்பிரிவில் 56 இடங்களும், இயற்பியல் பாடப்பிரிவில் 4 இடங்களும், வேதியியல் பாடப்பிரிவில் 5 இடங்களும், விலங்கியல் பாடப் பிரிவில் 20 இடங்களும், கணினி பயன்பாட்டியல் பாடப் பிரி வில் 3 இடங்களும், இரண்டாம் ஷிப்ட்டில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் 8 இடங்களும் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களுக்கேற்ப, இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பித்தோரின் மின்னஞ்சல் மற்றும் செல்பேசி எண்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2 பாடப் பிரிவில் கணிதம் பயின்று விண்ணப்பித்தவர் கள், இதுவரை கலந்தாய்வில் பங்கேற்காதவர்கள், பங் கேற்று இடம் கிடைக்காதவர்கள் கணிதப் பாடப்பிரிவில் சேர் வதற்குக் கலந்தாய்வில் பங்கேற்கலாம். வரும் செவ்வா யன்று (நாளை) கல்லூரி வளாகத்தில் இரண்டாம் கட்டக்  கலந்தாய்வின் இரண்டாம் நிலைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர்  வ.கிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

ரேசன் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பு

திருப்பூர், ஜூன் 18- ரேசன் அரிசி கடத்தல் சம்பந்தமாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் கிடங்கு மற்றும் ரேஷன் கடை கள், நேரடி கொள்முதல் நிலையம் ஆகிய இடங் களை கண்காணித்து பல் வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் கரடிவாவி சோத னைச் சாவடி மற்றும் மடத்துத் குளம் சோதனை சாவடி களில் திருப்பூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தனிப் படையினர் வெள்ளியன்று இரவு முதல் சனிக்கிழமை காலை வரை விடிய, விடிய  கனரக லாரிகளில் சோதனை நடத்தினர். கேரள மாநிலத்துக்கு லாரிகளில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறதா? என்று தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டனர். 100க்கும் மேற்பட்ட லாரிகளில் சோதனை நடத் தப்பட்டது.

கஞ்சா விற்பனை: ஒருவர் கைது

கோவை, ஜூன் 18- கோவை சிங்காநல்லூர் போலீசார் சனியன்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காமராஜர் சாலை மணீஸ் தியேட்டர் அருகே ஒரு வாலிபரை சந்தேகத் தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.  அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். போலீ சார் சோதனை செய்த போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடு பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கஞ்சா  விற்பனையில் ஈடுபட்ட இருகூர் ரோடு நேரு நகரை சேர்ந்த  நீலகண்டன்(20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. போலீசார் அவரை  நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறை யில் அடைத்தனர்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பேட்டரியில் இயங்கும் ஆட்டோக்கள்

மேட்டுபாளையம், ஜூன் 18- திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேட்டரியில் இயங்கும் ரூ46 லட்சம் மதிப்புடைய 23 குப்பைகளை எடுத்து செல்லும் ஆட்டோக்களை, மேட்டுப்பாளையம் நகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் ஆ.ராசா எம்.பி., ஒப்படைத் தார்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நகர பகுதியில் வசிக்கின்றனர். இங்கு நாள்தோறும் சேகரமாகும் குப்பை கழிவுகளை துரிதமாக அப்புறப்படுத்தும் பணிக்காக வாகனங்களை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டது. இதனையடுத்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேட்டரியில் இயங்கும் 23 ஆட்டடோக்கள் வாங் கப்பட்டது. இதனை பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்வு நகர் மன்ற உறுப்பினர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமை யில் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற நீலகிரி நாடாளுமன்ற உறுப் பினர் ஆ.ராசா,  தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.46 லட்சம்  மதிப்புடைய 23 பேட்டரியில் இயங்கும் ஆட்டோக்களை மக் கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். பேட்டரி மூலம் இயங்கும் இவ்வாகனங்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிலோ மீட்டர் வரை இயங்கும் எனவும், விரைவில் மேலும் 10 வாக னங்கள் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு வரவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற  உறுப் பினர்கள் நகராட்சி பணியாளர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஊருக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு

உதகை, ஜூன் 18- தேவாலா அருகே கிராமத்திற்குள் புகுந்த  மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து, வனப்பகுதியில் விடுவித்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவாலா அருகே வனப்பகுதியின் கரையோ ரம் உள்ள கூவமூலா கிராமத்துக்குள் 12  அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்தது.  இதைக்கண்ட பொதுமக்கள் அச்சமடைந் தனர். தொடர்ந்து பந்தலூர் வனச்சரக வனத்து றைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பின் வனச்சரகர் சஞ்சீவி உத்தரவின்பேரில், வன வர் செல்லதுரை தலைமையிலான வனப் பணியாளர்கள் விரைந்து வந்தனர். அப்பகுதி யில் பதுங்கியிருந்த 12 அடி நீள மலைப் பாம்பை பாதுகாப்பாக பிடித்து, கீழ்நாடு காணி வனப்பகுதியில் விட்டனர். அதன் பின் னரே கிராம மக்கள் நிம்மதியடைந்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், மலைப்பாம்பு மட்டுமின்றி வனவிலங்குகள் ஊருக்குள் வந்தால், உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். அதன்பேரில் விரைந்து வந்து பாதுகாப்பான நடவடிக்கை எடுக்கப் படும், என்றனர்.

திருமணிமுத்தாற்றில் சாய கழிவுநீரை கலந்தால் கடும் நடவடிக்கை

சேலம், ஜூன் 18- திருமணிமுத்தாற்றில் சாய கழிவுநீரை கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் அதிகாரிகள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணிமுத் தாறு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக சென்று, காவிரியில் கலக்கிறது. சேலம் கொண்டலாம்பட்டி, ஆத்துக் காடு, உத்தமசோழபுரம் வழியாக திருமணிமுத்தாறு செல் கிறது. தற்போது பெய்த மழை காரணமாக, திருமணிமுத்தாற் றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த பகுதியில் ஒரு சில சாயப்பட்டறைகளின் கழிவுநீர் திருமணிமுத்தாற்றில் வெளி யேற்றி விடுவதாக புகார் எழுந்துள்ளது. அப்படி வெளியேற்றப் படும் கழிவுநீரால், ஆற்றில் நுரை பொங்கி செல்கிறது. இத னால் அந்த பகுதியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவ தாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். அப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்து வருவதாகவும், கழிவுநீர் கலந்து செல்வ தால், நுரை பொங்கி வருவதால் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாயப்பட்டறை கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்டறையை கண்டறிந்து, அந்த பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல், சாயப்பட்டறையின் கழிவுநீரை வெளியேற்றினால், அந்த பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர், அந்த பட்டறை மூடப்படும். கழிவு நீரினை முறையாக சுத்திகரிப்பு செய்யாத நிறுவனங்கள் மூடப்படும். அபராதம் விதிக்கப்படும். அனுமதி பெறாத சாயப் பட்டறைக்கு வாடகைக்கு அளித்தால், அந்த உரிமையா ளர் மீது வழக்கு தொடரப்படும். அந்த உரிமையாளரிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும். திருமணிமுத்தாற்றில் சாய கழிவுநீர் கலப்பதை தடுக்க கண் காணிப்பு குழு அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது, என்றனர்.

சிறைவாசிகளுக்கு பல் மருத்துவ முகாம்

சேலம், ஜூன் 18- சேலம் மத்திய சிறையில் விநாயகா மிஷன் சங்கராச் சாரியார் பல் மருத்துவக்கல் லூரி சார்பில் இலவச பல்  மருத்துவ முகாம் நடைபெற் றது. மருத்துவர் எம். பிரசாத் தலைமையில் ஐவர் குழு வினர் மருத்துவ முகாமில் பங்கேற்றனர். பல் கூச்சம்,  பல் கரை, மற்றும் சிதலம டைந்த பற்களை அகற்றுதல் போன்றவற்றிற்கு சிறை வாசிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், சிறை கண்காணிப்பாளர் (பொ) ஜி. வினோத், சிறை மருத்துவர் பிரதீப், சிறை மனநல ஆலோ சகர் வைஷ்ணவி, சிறை நல அலுவலர் அன்பழகன் மற் றும் ஜெயிலர் மதிவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.