கோபி, ஆக.23- வேளாண் விரிவாக்க மையத்தில், போதிய நெல்ரகம் இருப்பு உள்ளனவா என்பது குறித்து வேளாண் இணை இயக் குனர் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஒருங்கி ணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் வியாழனன்று ஆய்வு மேற்கொண் டார். தொடர்ந்து, கீழ்பவானி பாசனத்திற்கு பருவத்திற்கேற்ற விதைநெல் வழங்குதல் சன்னரகம் மோட்டா ரகங்கள் வழங்கு வது போதிய நெல்ரகம் இருப்பு உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சார இணைப்புகளை முறையாக பயன்படுத்துகின்ற னரா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டி ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது வேளாண் உதவி இயக்குனர் முரளி, வேளாண் அலுவலர்கள் சிவபிரகாஷ், சந்திரசேகர், உதவி அலுவலர் பாலுகருஷ்ணன், விஜய்குமார், கிடங்கு மேலாளர் விஜயகுமார் என வேளாண் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.