நாமக்கல், ஜூலை 24- திருச்செங்கோடு அம்மா உணவகத்தில் நகர்மன்றத் தலை வர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக்கு உட் பட்ட பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உண வகத்தில், திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு புதனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு குறித் தும் உணவின் தரம் குறித்தும் மக்களிடையே கேட்ட றிந்தார் மற்றும் அங்கு மக்களுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு ஆய்வு செய்தார். மேலும், போதிய இருப்பு கள் உள்ளதா எனவும் சமையலறை தூய்மையாக வைத்துள் ளார்களா என்றும் ஆய்வு செய்தார்.