தபால் தலை சேகரிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
கோவை, ஜூலை 26- தபால் தலை சேகரிக்கும் திட்டத்துக்கு உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தபால் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கோவை அஞ்சல் கோட்டத்தின் முது நிலை கோட்டக் கண்காணிப்பாளர் கே.கோபாலன் வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தபால் தலை சேக ரிக்கும் மாணவர்களுக்கு அஞ்சல் துறை சார்பாக “தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா” கல்வி உதவித்தொகை திட்டம் 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தகுதியானவர்கள் ஆவர். தபால் தலை சேகரிக்கும் சங்க உறுப்பினராகவோ, தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பராகவோ இருக்க வேண்டும். இதில், இரண்டு கட்ட தேர்வுகள் நடத்தப் படும். முதல் சுற்றில் மண்டல அளவில் வினா விடை தேர்வு நடைபெறும். தேர்வு பெற்ற மாணவர்கள் இரண்டாம் சுற்றில் தபால் தலை சேகரிக்கும் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயி ரம் உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும், இதுகுறித்த தகவலுக்கு WWW.TAMILNADU POST.IN என்ற இணையதளத்தை அணுகலாம். இதை யடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் துறைத் தலைவர், மேற்கு மண்டலம், கோவை-641002 என்ற முகவரிக்கு ஜூலை 29 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண் டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கருத்தரங்கம்
பென்னாகரம், ஜூலை 26- உலக சட்ட நீதி நாளை முன்னிட்டு, பாலி யல் வன்கொடுமைக்கு எதிரான சட்ட விழிப்பு ணர்வுக் கருத்தரங்கம் திங்களன்று பென்னாக ரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனை வர் கோ.வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் செல்வவிநாயகம் தலைமை யேற்று சிறப்புரையாற்றினார். இதில் வழக்க றிஞர் தேவேந்திரன்,பென்னாகரம் இலவச சட்ட உதவி மையம் சார்பில் சிவக்குமார் மற் றும் மகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துக்கொண்டு, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள் மற் றும் குற்றங்களுக்கான தண்டனைகளை மாணவர்களிடையே தெளிவாக எடுத்து ரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ் விழாவின் இறுதியில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.கண்ணுச்சாமி நன்றியுரையாற் றினார்.
குன்னத்தூரில் அலைபேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு
திருப்பூர், ஜூலை 26 - திருப்பூர் அருகே அலைபேசி கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூராட்சி 13, 14, 15 ஆவது வார்டு பகுதியில் 500 குடும்பங்கள் வசித்து வருகின் றன. இப்பகுதியில் மிக அதிக சக்தி வாய்ந்த இன்டஸ் டவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் டவர் அமைப்பதற்கு வேலை மேற்கொள்ள ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வசிக்கும் குடும்பத்தினர் அனைவரும் இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 15 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். ஆனால் இதுவரை அதற்கு எந்த தகவலும் தெரிவிக்க வில்லை. இப்பகுதியில் என்.ஆர்.கே.என் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரம் குழந்தைகள் படித்து வருகின்றனர். அத்துடன் கர்ப்பிணிப் பெண்கள், முதி யோர், குழந்தைகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள 500 குடும்பங்களின் நலன் கருதி இண்டஸ் டவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் டவர்கள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இப்பகுதி பொது மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ரூ.4 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
தாராபுரம், ஜூலை 26- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கழிவுநீர் கால்வாய் வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து. கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ரூ.4 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டது. தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி 5 ஆவது வார்டு பகுதியில் நீண்ட நாட்களாகக் கழிவுநீர் கால் வாய் வசதி கேட்டு ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் 15 ஆவது நிதிக் குழு மானிய திட்டத் தில் ரூ.4 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பொக்லைன் மூலம் குழி தோண்டும் பணியை ஊராட்சி தலைவர் செல்வி ரமேஷ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து எம்.பி.திருநகரில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 75 மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் ஆணையா ளர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கே.கே.ஜீவானந் தம், துணைத்தலைவர் நாச்சிமுத்து, வார்டு உறுப்பினர்கள் நர் மதா ஈஸ்வரன், அபிநயா இளங்கோவன், தனலட்சுமி நாகராஜ் மற்றும் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் பெரியசாமி செய்திருந்தார்.
வி.எஸ்.என். ஆறுச்சாமி நினைவேந்தல்
தாராபுரம், ஜூலை 26 - தாராபுரத்தில் அரிமா சங்க தலைவர், தொழிலதிபர் கல்வி யாளர் வி.எஸ்.என்.ஆறுச்சாமி கடந்த ஜூன் 16 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். ஞாயிறன்று தாராபுரம் அரிமா திருமண மண்டபத்தில் அவரது நினைவேந்தல் நிகழ்வு இயக்க தலைவர் நல்லசாமி தலைமையில் நடைபெற்றது. அங்கு வி.எஸ்.என்.ஆறுச் சாமி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அனைவரும் மரியாதை செலுத்தினர். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அரிமா சங்கங்களின் முன் னாள் மாவட்ட தலைவர் முத்துசாமி, தமிழக முதல்வர் ஸ்டா லின் உறவினர் ஜோதி ராமசாமி, சென்னை சில்க்ஸ் அதிபர்கள் சந்திரன், ஆறுமுகம், வி.எஸ்.என்.ஆறுச்சாமியின் சகோதரர் கள் மருத்துவர் வெங்கடாசலம், வழக்குரைஞர் பாலகிருஷ் ணன், நகர அரிமா சங்கத்தைச் சேர்ந்த சாரதாஸ் சண்முக வேல், நகர அரிமாசங்க அறக்கட்டளை தலைவர் கந்தவி லாஸ்.கோபாலகிருஷ்ணன், தாராபுரம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் சிவபாலன், வி எஸ் என் அரிசி ஆலை மேலாளர் மதியழகன், மத்திய அரிமா அறக்கட்டளை தலை வர் மருத்துவர் தங்கராஜ், சொர்க்கம் அறக்கட்டளை தலைவர் ஞானசேகரன், மனவளக்கலை மன்றதலைவர் மருத்துவர் செல்லமுத்து, அரிசி ஆலை அதிபர்கள் சங்க நிர்வாகி மணி, தமிழ்கலைமன்ற செயலாளர் சண்முகம் மற்றும் பொது நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் மறைந்த ஆறுச்சாமி பற்றி நினைவு கூர்ந்தனர். நிகழ்ச்சிகளை தாராபுரம் நகர அரிமாசங்க அறக்கட்டளை பொருளாளர் டி.எஸ்.சிவக்குமார் தொகுத்து வழங்கினார்.
கோவில் அன்னதானக் கூடத்தில் தகராறு
அவிநாசி, ஜூலை 26- அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானக் கூடத் தில் கோயில் ஊழியருக்கும், பக்தருக்கும் இடையே திங்கள்கி ழமை தகராறு ஏற்பட்டது தொடர்பாக பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில், நாள்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் வழக்கம் போல அன்னதானத்திற்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அப்போது, தாய், மகள் அன்னதானம் சாப்பிட சென்றுள்ளனர். அதில் தாய்க்கு டோக்கன் கிடைத்த தால் அவர் மட்டும் சாப்பிட அமர்ந்துள்ளார். கண் பார்வை குறைபாடுள்ள மகள் வரிசையில் காத்திருந்ததாகக் கூறப்ப டுகிறது. சிறிது நேரம் கழித்து, முன் சென்றவர்கள் உடன் மகள் சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளார். உடனே அங்கிருந்த கோயில் பெண் பணியாளர், டோக்கன் இல்லாமல் சாப்பிட அனுமதியில்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து பக்தருக் கும் பணியாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாய் மற்றும் கண் பார்வை குறைபாடுள்ள மகள் அளித்த புகாரின் பேரில் கோயில் நிர்வாகத்தினர் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்ட னர். அதன் அடிபடையில் கோயில் பணியாளர் காலாமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கார்கில் வெற்றி தினம் அனுசரிப்பு
திருப்பூர், ஜூலை 26 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்ப ணித் திட்டம் அலகு-2 சார்பாக செவ்வாயன்று கல்லூரி வளா கத்தில் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு இராணுவ வீரர்க ளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாணவச் செயலர்கள் அருள்குமார், சுந்த ரம், பூபதி ராஜா தலைமையில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல் வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
706 பேர்மீது வழக்கு பதிவு
திருப்பூர் ஜூலை 26- இருசக்கரவாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணி யாமல் சென்ற 155 பேர் மீதும், குடி போதையில் வாகனங்க ளில் சென்ற 12 பேர் , சிக்னலை மதிக்காமல் செல்வது,நான்கு சக்கர வாகனங்களில் செல்கை யில் சீட பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச் செல்வது உள்பட பல்வேறு வித மான போக்குவரத்து விதிகளை மீறிய 706 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமி ருந்து அபராதமாக ரூ.2,13,600 வசூலிக்கப்பட்டது என்று திருப் பூர் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:28.66/60 அடி
நீர்வரத்து:19கன அடி
வெளியேற்றம்:27கன அடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 88.55/90 அடி
நீர்வரத்து:803கன அடி
வெளியேற்றம்:845 கன அடி
பண மோசடி: ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
ஈரோடு, ஜுலை 26- வீட்டுமனைக்கு தவணை முறையில் பணம் பெற்று மோசடி செய்த ரியல் எஸ் டேட் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகில் ஸ்ரீசக்தி நகர் என்னும் பெயரில் அரசு அங்கீ காரத்துடன் வீட்டுமனை என விளம்பரம் செய் யப்பட்டிருந்தது. இதனை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் எஸ்.வடிவேல், பாலாஜி மற்றும் கே.தியாகு ஆகியோர் இந்த விளம்ப ரத்தை செய்துள்ளனர். இதில், முழு தொகை யாகவோ அல்லது மாதத்தவணை முறை யிலோ பணம் செலுத்தி வீட்டுமனை வாங்க லாம் என்று கூறப்பட்டது. இதனைக் கேள்விப் பட்ட சங்கு நகரைச் சேர்ந்த நிசார் என்பவர் முழு பணமும் செலுத்தி வீட்டுமனை பெற நினைத்தார். அதன்படி 2016 மார்ச் மாதத்தில் ஒரு மனைக்கும், மே மாதத்தில் ஒரு மனைக் கும் ஆக மொத்தம் ரூ.1.23 லட்சம் செலுத்தி யுள்ளார். இதன்படி, 2.25 சென்ட் அளவு கொண்ட இரண்டு வீட்டுமனைகளுக்கான கிரையம் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். பல மாதங்கள் கடந்த பின் னும் தொடர்ந்து தவணை சொல்லியுள்ளனர். இதனையடுத்து இவர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய பிறகு தங்களின் மோச டியை நியாயப்படுத்த முயற்சித்துள்ளனர். எனவே, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இவரைப்போலவே இந்நிறு வனத்தால் பாதிக்கப்பட்ட சிலரும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன் தலைமையில் மனு அளித்தனர். இதில், சென் னிமலை, தோப்புபாளையத்தில் ஒதுக்கப் பட்ட வீட்டுமனை இடங்களை கிரையம் செய்து கொடுக்க வேண்டும். பணத்தை வாங் கிக் கொண்டு வீட்டு மனை பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றும் வடிவேல், பாலாஜி கே.தியாகு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தி யுள்ளனர்.
வழிப்பறி: கைது
கோவை, ஜூலை 26- கோவை டாடாபாத் பகு தியை சேர்ந்தவர் விக்னேஷ் (28). பெட்ரோல் பங்க் மேலா ளரான இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், விக்னேசை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்திமுனையில் அவரை மிரட்டி சட்டைப்பை யில் இருந்த ரூ. 500-யை பறித்து தப்பினார். இதுகு றித்து விக்னேஷ் அளித்த புகாரின்பேரில், ரத்தினபுரி காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வந்த னர். இதையடுத்து வழிப்பறி யில் ஈடுபட்ட செட்டிபாளை யம், பாரதி நகரைச் சேர்ந்த ஈசாத் அலி (19), என்பவரை கைது செய்தனர்.