districts

img

காவல் நிலையத்தை பார்வையிட மாணவர்கள்

நாமக்கல், ஆக. 20- குமாரபாளையம் தனியார் பள்ளி மாணவ ,மாணவிகள் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து காவல் நிலையத்தில் பார்வையிட்டனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு பயிலும் 60 மாணவ மாணவிகள் குமாரபாளையம் காவல் நிலையத்தில் செவ்வாயன்று காவல்நிலைய பணி குறித்து பார்வையிட்ட னர். அப்பொழுது அவர்களிடம் காவல் ஆய்வாளர் தவமணி காவல்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் குறித்து விளக்கம் அளித்தார். இதில், பள்ளி மாணவ மாணவிகள் அவசியம் தெரிந்தி ருக்க வேண்டிய குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் எண் 1098 குறித்தும் விளக்கம் அளித்தனர்.  குழந்தைகளின் பெற்றோர்கள் தலைக்கவசம் அணியா மல் வாகனங்களில் சென்றால் விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். எனவே, பெற்றோர்களிடம் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  மாணவ மாணவிகளின் தாயார் மற்றும் அருகில் இருக்கும் பெண்கள் அனைவரும் காவலன் உதவி செயலி குறித்து தெரிந்திருக்க வேண்டும். அந்த செயலியை தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து ,அதன் செயல் பாடுகள் குறித்து விளக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.  குற்றவாளிகள் தண்டிக்கப்படும் அறை குறித்து விளக்கம் மற்றும், குற்றவாளிகளை துப்பாக்கி மூலம் எச்சரிக்கை செய்து பிடிக்கும் நிலை குறித்தும் விளக்கி தெரிவித்தார். மேலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்தும் மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.