districts

img

அரசு பள்ளிகளை மேம்படுத்த கோரி மாணவர் சங்கத்தினர் பிரச்சார பேரணி

திருப்பூர், மே 26- அரசுப்பள்ளிகளில் மாணவிக ளுக்கு தேவையான நாப்கின் மற்றும்  நாப்கின் எரியூட்டி இயந்திரங்களை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க  திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் பிரச் சார இயக்கம் நடைபெற்று வருகி றது. அரசுப்பள்ளிகளில் உள்ள அடிப் படை பிரச்சனைகளை தீர்க்க வேண் டும். அனைத்து பள்ளிகளுக்கும் கூடு தலாக பேருந்துகள் இயக்க வேண் டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளுக்கு தேவையான  நாப்கின் மற்றும் நாப்கின் எரியூட்டி  இயந்திரங்களை அமைத்து தர  வேண்டும். சுகாதாரமான சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும். விளையாடுவதற்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்திய மாண வர் சங்க திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் நான்கு நாள் பிரச்சார இயக் கம் நடைபெற்று வருகிறது.  அதன் ஒரு பகுதியாக வியாழ னன்று பெரியாயிபாளையத்தில் மாவட்ட தலைவர் பிரவீன் தலை மையில் பிரச்சார பேரணி  துவங்கி யது. அரசுப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி பேரணியை தொடங்கி வைத்து துவக்கவுரையாற்றினார். இந்த பிரச் சார இயக்கம் ஜெயம் பேக்கரி, திரு முருகன்பூண்டி பேருந்து நிலைய ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.  இதில், மாவட்ட செயலாளர் சம் சீர் அஹமத், மாவட்ட துணைத்தலை வர் கல்கிராஜ், துணைச்செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட திரளான மாணவர்கள் பங்கேற்றனர். அதேபோல் வெள்ளியன்று பெரு மாநல்லூரில் மாநிலக்குழு உறுப்பி னர் சாலினி தலைமையில் பிரச்சார பேரணி தொடங்கியது. பாண்டியன் நகர், வாவிபாளையம், ஊத்துகுளி அகிய பகுதிகளில் நடைபெற்றது. வாலிபர் சங்க வடக்கு ஒன்றிய தலைவர் ரேவந்த் குமார் வாழ்த்தி பேசினார்.  இதில், மாவட்ட துணைத்தலை வர் கல்கிராஜ், மாவட்ட துணைச்செய லாளர்கள் மோகன பிரியா,  மணிகண் டன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சுதா, ஜோதிபாசு, சபரி, மாவட்ட  குழு உறுப்பினர் உதயா உட்பட பலர்  பங்கேற்றனர்.