districts

img

பழுதடைந்த விடுதி கட்டிடத்தை சீரமைத்திடுக வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

நாமக்கல், மே 9- நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கல்லூரி விடுதியை சீரமைத்து தரக் கோரி இந்திய மாணவர் சங்கம் தலை மையில் மாணவர்கள் வகுப்பை புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், லத்துவாடி பகுதியில் செயல்பட்டு வரும் அறிஞர்  அண்ணா அரசு கலை கல்லூரியின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். விடுதி மிகவும் பழுதடைந்தும், மேற்கூரை இடிந்து  விழும்  அளவிலும் கட்டிடத்தின் நிலை  உள்ளது. ஆபத்தை உணர்ந்த மாண வர்கள் 4 மாதங்களுக்கு முன்பே கல் லூரி முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தும் எவ்வித நடவ டிக்கையும் இல்லை. மேலும், கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்திருந்த நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இந்நிலையில், திங்களன்று இந் திய மாணவர் சங்கத்தின் தலைமை யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்பை புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வார காலத்திற்குள் விடுதியை சீர மைத்து தருவதாகவும், அதுவரை மாணவர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதி அளித்ததையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட் டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் ஒன்றிய செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட நிர் வாகி கோகுல், கல்லூரி கிளை உறுப் பினர்கள் கோகுல் அகிலன் மைகில் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.