districts

img

இருபாலர் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற எதிர்ப்பு மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஏப்.25- அரசு உதவி பெறும் சேலம் சௌடேஸ் வரி கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்றும் கல்லூரி நிர்வாகத்தின் முயற் சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாண வர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் அரசு உதவிபெறும் இருபா லர் கல்லூரியான சௌடேஸ்வரி கல்லூ ரியை, மகளிர் கல்லூரியாக மாற்ற கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனை கண்டித்தும், அங்கு கல்வி பயிலும் மாணவர் களின் எதிர்காலம் வீணாகும் என்ற அடிப்ப டையில் இந்திய மாணவர் சங்கம் தொடர்ச்சி யான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.  இதன்ஒருபகுதியாக இந்திய மாண வர் சங்கத்தினர் பெற்றோர்கள், மாணவர் கள், சமூக ஆர்வலர்களிடம் கையெ ழுத்து இயக்கத்தை நடத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாணவர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பவித்ரன் தலைமை வகித்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், மாநகர செயலாளர் வி.அருண்குமார், மாந கர துணைத் தலைவர் அரவிந்த், துணைச் செயலாளர் டார்வின் உட்பட திரளான மாண வர்கள் கலந்து கொண்டனர்.