திருப்பூர் ஜூலை 6- சென்னை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கேரளா,கர்நாடகா,தெலுங் கானா , மகாராஷ்டிரா,பாண்டிச்சேரி , அசாம் போன்ற பல மாநி லங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் பாண்டியன் நகர் அரசு பள்ளி மாணவர்கள் ராகவ் பெருமாள் மற்றும் லலித் குமார் இருவரும் தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த் துள்ளனர். இதையடுத்து அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யர் மற்றும் கராத்தே பயிற்சியாளர் நாட்ராயன், மாணவர் களை பெற்றோர்கள் பாராட்டினர்.