நாமக்கல், நவ. 30- குமாரபாளையம் அருகே பி.டெக் படிக்கும் கல் லூரி மாணவர் கல்லூரி விடு தியிலேயே உயிரிழந்த சம்ப வம், சக மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள் ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள பல் லக்காபாளையத்தில் எக்ஸெல் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வரு கிறது. இக்கல்லூரியில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சத்யஜித்குமார் என்ற மாணவர், பி.டெக் ஐ.டி பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். இவர், புதனன்று தேர்வு அறையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த வேளையில், திடீரென மயங்கி விழுந் ததாக தெரிகிறது. இதையடுத்து, அருகி லிருந்த சக மாணவர்கள், சத்யஜித்தை மீட்டு குமாரபாளையம் தனியார் மருத்துவம னையில் சிகிச்சை பெற வைத்து, மீண் டும் கல்லூரி விடுதி அறையில் தங்க வைத் துள்ளனர். இந்நிலையில், மாலை மீண்டும் அவ ருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்ப டுகிறது. விடுதி காப்பாளர் சத்யஜித்தை மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக் கவில்லை என கூறப்படுகிறது. கல்லூரி முடிந்து அறைக்கு வந்த சக மாணவர்கள், சத்யஜித்குமார் அசைவின்றி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, சத்ய ஜித்தின் உடலை பரிசோதித்த மருத்து வர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரி வித்துனர். இதுகுறித்த தகவலறிந்த சகமாணவர்கள் கல்லூரி வளாகத்தில் திடீர் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த குமா ரபாளையம் போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி னர்.