திருப்பூர், பிப்.28 - ஒருங்கிணைந்த சமையலறை என்ற தனி யார்மய திட்டத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக் கான விடுதியில் தற்போது உள்ள உணவு சமைக்கும் முறையை மாற்றி, தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சமையலறை முறையை அறிமுகப்படுத்துகிறது. அதில், மாவட்டத் திற்கு ஒரு சமையல் கூடம் அமைத்து அதை தனியாருக்கு ஒப்பந்தம் விட்டு, ஒரே இடத்தில் உணவு சமைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளுக்கும் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்தால் மாணவர் களின் அன்றாட உணவு முறைகளில் பல் வேறு சிக்கல் ஏற்படும். மேலும், மாணவர்க ளுக்கு அளவு சாப்பாடு என்ற கட்டுப்பாடும் ஏற்படக்கூடும். எனவே மாணவர்களுக்கு விரோதமாக தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாண வர் சங்கம் வலியுறுத்தியிருந்தது. அதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கத்தின் திருப் பூர் மாவட்டத் தலைவர் கல்கிராஜ் தலைமை யில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், சிக்கண்ணா கல்லூரி விடுதிக ளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவும், ஒருங்கிணைந்த சமையலறை முறையை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பட் டது. இதில், மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் பிரவீன்குமார் கண்டன உரையாற்றி னார். நிர்வாகிகள் மணிகண்டன், சபரிநா தன், கல்லூரி கிளை நிர்வாகிகள் விமல் ராஜ், முகிலன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.