districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் போராட்டம்

நாமக்கல், அக்.6- ராசிபுரம் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வச திகள் செய்து தர வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கல்லூரி மாண வர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசி புரம் திருவள்ளுவர் அரசு  கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கும் போதிய கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தற்போதுள்ள அனைத்து கழிப்பறைகளும் முறையாக சுத்தம் செய்ய வேண்டும். மாண விகள் விடுதியில் நாப்கின் எரியூட்டும் இயந்தி ரம் அமைத்து தர வேண்டும். மாணவ, மாணவி கள் விடுதிகளில் தரமான உணவுகள் வழங்க  வேண்டும். போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்து துறைகளி லும் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கல்லூரியில் சிற்றுண்டிச்சாலை அமைக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கல்லூரி  மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல் லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன், கல்லூரி முதல்வர் பானுமதி ஆகியோர் போராட்டக்காரர்க ளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப் போது, அடிப்படை வசதிகள் செய்து தர  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதி காரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து  போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள்  கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட் டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தங்கராஜ், மாவட்டத் தலைவர் சர வணன், கல்லூரி கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.