districts

img

10 ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மினி சிற்றுண்டி கிராம மக்களின் கூட்டு முயற்சியால் மாணவர்கள் உற்சாகம்

கோவை, பிப்.7- கார்த்திக் மதிவாணன் அன்னூர் அடுத்த வாகராயம்பா ளையம் அரசு மேல் நிலைப்பள்ளி யில் பொதுத்தேர்வுக்கு தயாராக, மாலை நேர சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிய ருக்கு கிராம மக்களின் கூட்டு முயற்சி யில் சத்து நிறைந்த மினி சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம், மோப்பிரி பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாகராயம்பாளையத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆயி ரத்திற்க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இங்கு 10 முதல் 12 ஆம் வகுப்பு படிக் கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் நெருங்கும் போது மாலை நேர சிறப்பு வகுப்பு கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த சமயங்களில் மாணவர்கள் பசியால் சோர்வடைந்து விடக்கூடாது என்ப தற்காக பள்ளி நிர்வாகம், பெற்றோர்  ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு, முன்னாள் மாணவர் கள் அமைப்பு, பொதுமக்கள் மற்றும்  தன்னார்வலர்கள் உதவியுடன் மினி சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த 2014ஆம் ஆண்டு முன்னெ டுத்தனர்.  

கடந்த 10 ஆண்டுகளாக  பொது மக்கள் ஒத்துழைப்புடன் நடத்தப் பட்டு வரும் இந்த திட்டத்திற்கு, மாணவ, மாணவிகள் மத்தியில் நல்ல  வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மினி சிற்றுண்டி திட்டத்தில் தினமும்  மாலை வேளையில் வெஜிடபிள் பிரி யாணி, சுண்டல், பச்சைப் பயிறு  என விதவிதமாக ஆரோக்கியமான உணவு வகைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நேரத்தில் சோர்வு நீங்கி படிப்பில் கவனம் செலுத்த முடிந்ததாக மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். இது குறித்து பள்ளியின் தலை மையாசிரியர் செந்தில்குமார் கூறு கையில்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தின மும் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகி றோம். இதில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு மாலை நேர மினி சிற்றுண்டியாக தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை வழங்கி வருகி றோம். இதன் மூலம் மாணவ மாணவி யர் சேர்க்கையும், தேர்ச்சி சதவீதமும்   உயர்ந்துள்ளது. மேலும் பொதுமக் கள், தன்னார்வ தொண்டு நிறுவ னங்கள் மற்றும் முன்னாள் மாணவர் கள் உதவி வருவதால் இந்த திட்டம் தற்போது வரை சுணக்கமின்றி நடை பெற்று வருகிறது. பொதுமக்கள் உத வியுடன் எதிர்வரும் காலங்களிலும் இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன் னெடுப்போம் என தலைமையாசி ரியர் செந்தில்குமார் நம்பிக்கையுடன்  தெரிவித்தார்.