கோவை, அக்.10- மதம் சார்ந்த அமைப்புகள் அரசு பள்ளி வளாகங்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ப்ரூக் பீல்ட்ஸ் அருகேயுள்ள மாந கராட்சி ஆரம்ப பள்ளியில் ஆர்எஸ்எஸ் உறுப் பினர்கள் பயிற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பயன்படுத்தி யதை கண்டித்தும், உள்ளே அனுமதியளித்த பள்ளியின் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் டவுன் ஹால் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி வளாகங்களை மதம் சார்ந்த அமைப்பு கள் பயன்படுத்த முழுமையான தடை விதிக்க வேண்டும். பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்வு கள் நடக்கும் போது அது மாணவர்களுக்கு திட்டமிடப்பட்டு திணிப்பதாக இருக்கும். வேண்டு மென்றே ஆர்எஸ்எஸ் அமைப்புகள் குழப் பத்தை ஏற்படுத்த நினைக்கிறது. சம்பந்தப் பட்ட மாநகராட்சி பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு அனுமதியளித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தினர். முன்னதாக இந்த போராட்டத்திற்கு வாலி பர் சங்க மாவட்ட செயலாளர் அர்ஜூன் தலை மையில் நடைபெற்றது. இதில், இந்திய மாண வர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் கயல்விழி, மற்றும் ரமேஷ் கண்ணன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா உள்ளிட்ட திரளான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.