districts

img

இருபாலர் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற எதிர்ப்பு

சேலம், ஏப்.6- அரசு உதவி பெறும் சேலம் சௌடேஸ் வரி இருபாலர் கல்லூரியை நடப்பு கல்வி யாண்டு முதல் மகளிர் கல்லூரியாக மாற்ற கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாணவர் சங் கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம், கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் அரசு உதவி பெறும் சௌடேஸ்வரி இருபாலர் கல்லூரி செயல் பட்டு வருகிறது. சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி படித்து வரும் நிலையில், கல்லூரி நிர்வாகம் நடப்பு கல்வி யாண்டில் முதல் அதனை மகளிர் கல்லூரி யாக மாற்ற முடிவு செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரி வித்து இந்திய மாணவர் சங்க மாவட்ட தலை வர் பவித்ரன் தலைமையில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் கூறுகையில், சேலம் சௌடேஸ்வரி இருபாலர் கல்லூரி  அரசு உதவி பெறும் கல்லூரியாக செயல் பட்டு வருகிறது.

மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி கனவை நனவாக்கி வரும் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், மாணவர்களின் உயர்கல்வி பயிலும் வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற் படும், என்றார்.  முன்னதாக, சேலம் மாநகரில் மகளிருக் கென இரண்டு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. சௌடேஸ்வரி கல்லூரியை மக ளிர் கல்லூரியாக மாற்றினால் அதில் கல்வி  பயிலும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகும். எனவே, சௌடேஸ்வரி கல்லூரியை தொடர்ந்து இரு பாலர் கல்லூரியாக நீடிக்க மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மகளிர் கல்லூரியாக மாற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் தெரி வித்தார். மாணவர்களை விமர்சித்த கல்லூரி முதல்வர் இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கி சௌடேஸ்வரி கல்லூரி முதல்வர் மோசமான வார்த்தை களில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால்  மேலும் ஆவேசமடைந்த மாணவர்கள், முதல்வரை கண்டித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்வ இடத்திற்கு வந்த கொண்டலாம்பட்டி காவல் துறையினர் மாணவர்களை சமாதானப் படுத்தினர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்ததைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.