districts

img

தினமலர் நாளிதழை எரித்து மாணவர் சங்கம் போராட்டம்

திருப்பூர், செப்.1- காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில்  செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழைக் கண்டிக்கும் வகை யில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தினமலர் நாளிதழ் எரிப்பு  போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு  திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செய்தி வெளி யிட்ட தினமலர் பத்திரிகையை கண்டித்து திருப்பூர் சிக் கண்ணா அரசு கல்லூரி மற்றும் பல்லடம் அரசு கல்லூரியில்  தினமலர் நாளிதழை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட னர். சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற  போராட்டத்திற்கு கிளை தலைவர் உதயராஜ் தலைமை ஏற் றார். மாவட்டத் தலைவர் கல்கி ராஜ், மாவட்ட துணை தலை வர் சபரிநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுஜிதா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பல்லடம் அரசு கல்லூரியில் மாவட்டக்குழு உறுப்பினர்  விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்  மாவட்டச் செயலாளர் பிரவீன் குமார், மாவட்டத் துணைத்  தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.