districts

img

யுஜிசி வரைவு அறிக்கையை கண்டித்து மாணவர் சங்கம் போராட்டம்

சேலம், பிப் 17- ஒன்றிய அரசின் யுஜிசி வரைவு அறிக்கையை திரும் பப்பெற வலியுறுத்தி திங்க ளன்று சேலத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். யுஜிசி வரைவு அறிக் கையை ஒன்றிய அரசு  திரும்ப பெற வேண்டும். பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்திற்கான தேடுதல்  குழுவை ஆளுநரை நியமிப்பார் என்ற யுஜிசி  யின் புதிய அறிவிப்புக்கு எதிராக, மாநில  உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி  இந்திய மாணவர் சங்கத்தின் நாடு தழுவிய  போராட்டத்தின் ஒரு பகுதியாக சேலம் அஸ் தம்பட்டி தபால் நிலையம் முன்பு போராட் டம் நடைபெற்றது.  இந்தப் போராட்டத்திற்கு மாவட்டத் தலை வர்  வீ.அருண்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சே.பவித்திரன் கண் டன உரையாற்றினார். மாவட்ட துணை நிர்வா கிகள் டார்வின், கோகுல், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் நவீன், திவ்யா உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.