districts

மாணவர் சங்க தலைவர் சந்துரு படத்திறப்பு

கோவை, ஆக.23- இந்திய மாணவர் சங்க  கோவை மாவட்டத் தலைவராக பணியாற்றிய தோழர் சந்துரு-வின் படத்திறப்பு விழா புதனன்று ஒண் டிப்புதூரில் நடைபெற்றது. மாணவர்களின் உரிமை சார்ந் தும், பல்வேறு சமூக பிரச்சனை களுக்கு முன்நின்று களம் கண்ட வர் தோழர் சந்துரு. மாணவர் சங்க  கோவை மாவட்டத் தலைவராக சந்துரு பணியாற்றி வந்தார். ஒண் டிப்புதூர், ஆஞ்சநேயர் காலனி பகுதிக்குள் தனியார் சூயஸ் நிறு வனத்தை நுழைய விடாமல் போராடி நிறுத்தியவர். இதனி டையே கடந்தாண்டு உடல் நலக் குறைபாடு காரணமாக காலமா னார். குறைந்த காலத்தில் மக் கள் மத்தியில் சிறந்த களப்பணி யாளராக அறிமுகமான சந்துரு-வின் மறைவு, அதிர்ச்சியை ஏற் படுத்தியது. இவரின் முதலாமாண்டு நினைவு தினம் புதனன்று அனு சரிக்கப்பட்டது. மேலும், தோழர் சந்துருவின் உருவப்பட திறப்பு விழா புதனன்று மாணவர் சங்க  மாவட்டச் செயலாளர் அசாரூதீன் தலைமையில் நடைபெற்றது. ஒண்டிப்புதூர் அருகே உள்ள ஆஞ்சநேயர் காலனி சமுதாய கூடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்தை, வாலி பர் சங்க மாநிலப் பொருளாளர் கே.பாரதி திறந்து வைத்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், 57 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி, வாலிபர் சங்க மாவட்டப் பொருளா ளர் தினேஷ் ராஜா, சிஐடியு சுமைப் பணி சங்க சுப்பு, சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் மூர்த்தி ஆகி யோர் புகழஞ்சலி செலுத்தினர். இதில் மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகள் அனிதா, சந்தோஷ், ஆசாத், ஹரீஸ், வாலிபர் சங்க சிங்கை நகர தலைவர் சனோஜ்  உட்பட பலர் கலந்து கொண்ட னர்.