தாராபுரம், ஜூன் 20– ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னி பாத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்னிபத் திட்டத்தின் முலம் இளைஞர் களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக் கும் விதமாக ஒன்றிய அரசு செயல்பட்டு வரு வதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாராபுரம் அண்ணாசிலை முன்பு அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தின் முலம் நான்காண்டுகள் கழித்து ராணுவத்தில் இருந்து வெளியேற் றப்படும் இளைஞர்களுக்கு சேவா நிதி என்று சொல்லக்கூடிய குறிப்பிட்ட தொகையை மட்டும் வழங்கிவிட்டு அவர்க ளுக்கு ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் ஏதுமின்றி வாழ்வாதாரம் கேள்விக்குறி யாகும். ஒன்றிய அரசின் இத்திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற முழக்கங் கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணுசாமி தலைமை வகித்தார் மேலும் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், கட்சி நிர்வாகிகள் ஆர்.வெங்கட்ராமன், பி. பொன்னுசாமி, கி.மேகவர்ணன், சுப்பிரம ணியன், ஆ.மணியன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
காங்கேயம்
காங்கேயம் பேருந்து நிலையம் அருகே அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட் டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கே. திருவேங்கடசாமி, ஒன்றியக்குழு உறுப்பி னர் குமாரசாமி, டவுன் கிளையைச் சேர்ந்த ராமநாதன் உள்ளிட்டோர் மோடி அரசின் மோடி அரசின் தேசவிரோத கொள்கை களை கண்டித்து உரையாற்றினர்.
இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். திங்கள்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் துக்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பா.ஞானசேகரன் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத் தின் சூழ்ச்சியை விளக்கி மாணவர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் தௌ.சம்சீர் அக மது, வாலிபர் சங்க வடக்கு ஒன்றியச் செய லாளர் எஸ்.அருள் மற்றும் மாவட்டச் செய லாளர் செ.மணிகண்டன் ஆகியோர் உரை யாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.