districts

img

சுமைப்பணி தொழிலாளர்களின் போராட்டம்

ஈரோடு, நவ.17- ஈரோட்டில் சுமைப்பணி தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக தனியார் நிறுவனம் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் சுமைப்பணி தொழி லாளர்கள் உள்ளனர். இதில் ஈரோடு மாநகரில் உள்ள சுமார் 7  ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இத் தொழிலாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைளில் இருந்து  காக்க சிஐடியு உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக கூலி உயர்வு ஒப்பந்தம் காலாவதியான நிலையில், புதிய ஒப் பந்தத்திற்கு சிஐடியு உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் உள்ளிட்ட நிர்வாகங்கள் தொழிற்சங்கங்களின் கோரிக்கை களை ஏற்காமலும், நீதிமன்றம் சென்றும் காலம் கடத்தி வரு கிறது. இதற்கிடையில், கர்நாடகாவைத் தலைமையிடமாகக் கொண்ட விஆர்எல் லாஜஸ்டிக்ஸ் என்னும் நிறுவனம் ஈரோட் டில் புக்கிங் மற்றும் டெலிவரி என இரண்டு கிளைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் கடந்த தீபாவளிக்கு தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய போனஸ் மற்றும் கருணைத் தொகையினை வழங்க வில்லை. இதனால் சுமார் 15 ஆண்டு களாக வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஏமாற்றமடைந் தனர்.

அதுமட்டுமின்றி கடந்த 15 ஆம் தேதி முதல் 7 தொழிலா ளர்களை வேலை நீக்கம் செய்தது. இதனைத் தொடர்ந்து வட மாநில தொழிலாளர்களை வைத்து சுமைப்பணிகளை செய்ய  முயற்சித்தனர். இதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பிரச்சனை காவல் நிலையம் சென்றது. அங்கு சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது.  இந்நிலையில், மீண்டும் விஆர்எல் நிர்வாகம் சேலத்தி லுள்ள தனது கிளையிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து வேலையில் ஈடுபடுத்த வியாழனன்று திட்டமிட்டது. இத னையறிந்த தொழிலாளர்கள் சங்க வித்தியாசமின்றி அங்கு  திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த  அசோசியேசன் தரப்பினர் தொழிலாளர்களை தாக்கியுள்ள னர். இதனையடுத்து தொழிலாளர்கள் அசோகபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக ஏற்பட்ட தள்ளுமுள்ளில் தொழிலாளர்கள் மூவர் உட்பட நான்கு பேர் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் காவல்  ஆய்வாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தனியார் நிறுவனத்தினர் மற்றும் அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் தொழிற்சங்க தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து உரிமையாள ரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தனர்.