தருமபுரி, பிப்.12- தருமபுரியில் குடியிருப்பு பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் கும்பளபாடி அருகே உள்ள கரடிகால் குண்டு கொட்டாய் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரையொட்டி கல், மலை, குன்றுகள் அதிக அளவில் உள்ளது. இங்கு கனிம வளத்துறை சார்பில் கல் வெட்டி எடுக்க தனியாருக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப் படுகிறது. இந்நிலையில் இதற்கான பணி களை தொடங்கும் வகையில் ஜேசிபி இயந் திரங்களை கொண்டு வந்துள்ளனர். இதையறிந்த அக்கிராம மக்கள் கல்குவாரி அமையவுள்ள இடத்தை ஒட்டி குடியிருப்பு கள், ஆடு, மாடு மேயும் மேய்ச்சல் நிலம், விவசாய நிலம் உள்ளிட்டவைகள் உள் ளன. இத்தகைய நிலையில் கல்குவாரியில் பாறைகளுக்கு வெடி வைப்பதால் பல் வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே, இங்கு கல்குவாரி அமைக்க அனு மதியளிக்கக்கூடாது என வலியுறுத்தி ஜே சிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து இண்டூர் காவல் உதவி ஆய்வாளர் சீனி வாசன் சம்பவ இடத்திற்கு வந்து மக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து கல் குவாரி அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.