மக்கள் கவனத்தை ஈர்த்த சிபிஎம் கிளர்ச்சி பிரச்சாரங்கள்
ஈரோடு, செப்.5- மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையின் விளைவாக விலைவாசி கடுமையாக உயர்ந் துள்ளது. வேலையின்மை இளைஞர்களின் பகல் பொழுதை கொடூரமாக்கியுள்ளது. மக்கள் விரோத, தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் செப். 7 (நாளை) எழுச்சிகரமான மறியல் போராட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத் துள்ளது. இந்த மறியல் போராட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான உழைக்கும் மக்கள் பங்கெடுக்க உள்ளனர். இதன்ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமை துவங்கி, கிளைகள் வரை யில் கிளர்ச்சி பிரச்சாரங்கள் நடைபெற்று வரு கிறது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், இடைக்குழு, தாலுக்கா, கிளைச் செயலாளர்கள் பங்கேற் றனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய இப் பிரச்சார இயக்கங்கள் மக்கள் கவனத்தை வெகு வாக ஈர்த்துள்ளது. மறியல் ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு ரயில் நிலையம், கோபி செட்டிபாளையம், அந்தியூர், கடம்பூர் ஆகிய பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ராகுராமன் உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்க உள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். ரயில்நிலையம், எலச்சி பாளையம், நாமக்கல் நகரம் ஆகிய மூன்று மையங்களில் மறியல் போராட்டம் நடை பெறுகிறது. இதில், கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில், ஜங்சன் ரயில் நிலையம், சீரநாயக்கன்பட்டி, ஓமலூர், பன மரத்துப்பட்டி, நங்கவல்லி, எடப்பாடி, சங்ககிரி, ஆத்தூர், அயோத்தியா பட்டினம், மேட்டூர், மேச் சேரி, ஏற்காடு ஆகிய 12 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில், கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வ சிங், மாவட்டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ள னர்.
உதகை
நீலகிரி மாவட்டத்தில் உதகை, எருமாடு, கூடலூர் ஆகிய மூன்று மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில், கட்சி யின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாநிலக்குழு உறுப்பினர் மாரியப்பன் உள்ளிட்ட தலைவர்கள் தலைமையேற்க உள்ளனர்.
கோவை
கோவை மாவட்டத்தில், தபால் தந்தி அலுவ லகம், பிஎஸ்என்எல் அலுவலகம், இருகூர் ரயில் நிலையம், சரவணம்பட்டி, சுந்தராபுரம் மேட்டுப் பாளையம் ரயில்நிலையம், அன்னூர், பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட 9 மையங் களில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் தலைமையேற்க உள்ளனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில், அரூர், தருமபுரி, பலக்கோரு, பென்னாகரம் ஆகிய நான்கு மையங்களில் மறியல் போராட்டம் நடை பெற உள்ளது. இதில், கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் உள்ளிட்ட தலைவர்கள் தலை மையேற்க உள்ளனர்.
திருப்பூர்
இதேபோன்று, திருப்பூர் மாவட்டத்தில் பத்து மையங்களில் மறியல் போராட்டம் நடை பெற உள்ளது. இதில் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்ளிட்ட தலைவர் கள் தலைமையேற்க உள்ளனர்.
மறியல் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் - பி.சண்முகம்
நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் காவேரி ஆர்.எஸ். சிஐடியு தொழிற்சங்க அலுவ லகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பள்ளி பாளையம் தெற்கு ஒன்றியக் குழு சிறப்பு பேரவை கூட்டம் ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி தலைமையில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சண்முகம் பங்கேற்று பேசுகையில், தொடர்ந்து விஷம் போல ஏறி வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட கோரியும், வேலையின்மைக்கு எதிராகவும், ஒன்றிய மோடி அரசை கண்டித்து நாளை நடைபெறும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தை வெற்றிகர மாக்குவோம் என்றார். இதில், சிபிஎம் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.