districts

img

மின் கட்டண உயர்வு: நவ.25ல் வேலை நிறுத்தம்

கோவை, நவ.21– மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் தொழில் அமைப்பு கள் நவ.25 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலை நிறுத்தம் மற்றும்  உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக கூட்டாக அறிவித்தனர்.  கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் தற்போது தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வால் அதிருப்தி அடைந்துள்ளனர். பீக் ஹவர்ஸ் கட்டணத்தை குறைத்த தமிழக அரசு அதை முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பெடரேஷன் ஆப் கோயம்புத்தூர் இன்டஸ்ட்ரியல் அசோசியே ஷன் (Focia) அமைப்பினர் செய்தியாளர் களை திங்களன்று சந்தித்தனர்.

18 தொழில மைப்புகள் ஒன்றிணைந்து இந்த கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகை யில், பீக் ஹவர்ஸ் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், அதே போல சிறு, குறு  தொழில்களை பாதுகாக்க 112 கிலோ வாட் வரை முன்பிருந்த நிலை கட்டணம் ரூபாய் 35 தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வுக்கு பின் பில்களை பார்த்தால் அதிர்ச்சி ஏற்படுகிறது. தொடர்ந்து தொழிலை நடத்த முடியுமா? என தோன்றுகிறது. தற் போது, பீக் ஹவர்ஸ் கட்டணத்தை குறைத் தது எந்த பிரயோஜனமும் இல்லை. மின் மிகை மாநிலத்தில் பீக் ஹவர்ஸ் கட்டணம் தேவையில்லை. எட்டு சதவீதம் இயங்கும் லாபமற்ற இந்த தொழிலில் 60 சதவீதம் மின் கட்டணம் கட்டுகிறோம். கிலோவாட் கட்ட ணத்தால் நெருக்கடிக்கு உள்ளோம். இந்த சுமையை தாங்கும் சக்தி எங்க ளுக்கு இல்லை. நிலைகட்டணத்தை ஏற்க னவே இருந்தது போல் மாற்ற வேண்டும். மின்வாரியம் கிலோ வாட்டை இரண்டாகப் பிரித்து கட்டணத்தை உயர்த்தி பெரும் சுமையை எங்கள் மேல் வைத்துள்ளனர். தமி ழக அரசு மின்கட்டணத்தை திரும்ப பெற  வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கவே  இந்த வேலை நிறுத்தம் மற்றும் உண்ணா விரத போராட்டத்தை நடத்துகிறோம், என் றார்.