ஈரோடு, பிப்.13- ஒன்றிய பாஜக அரசின் தொழிலா ளர், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக பிப்.16 ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தை விளக்கி ஈரோடு மாநகராட்சி அலுவலக வளா கத்தில் தூய்மைப் பணியாளர்கள் மத் தியில் சிஐடியுவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்து. பொதுத்துறைகளை தனி யார் மயம் ஆக்கக்கூடாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்கு உள் ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயி கள் முன்னணியின் சார்பில் பிப்ரவரி 16ல் நாடு தழுவிய வேலை நிறுத்தத் திற்கு அறைகூவல் விடுக்கப்பட் டுள்ளது. இப்போராட்டம் குறித்து சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் விரிவான பிரச்சார இயக் கங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வா யன்று தூய்மைப் பணியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், வேலை நிறுத்த போராட்டத்தில் தூய்மைப்பணியா ளர்கள் பங்கேற்க வேண்டிய அவசி யம் குறித்து தலைவர்கள் உரையாற் றினர். இவ்வியக்கத்தில், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணி யன் மற்றும நிர்வாகி ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.