districts

img

திருப்பூரில் அணையாத தெரு விளக்குகள்!

திருப்பூர், நவ. 2 - திருப்பூர் மாநகரில் ஒரு பகுதியில் அணை யாத தெரு விளக்குகள் 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. திருப்பூர் மாநகராட்சி 23ஆவது வார்டுக்கு  உட்பட்ட குமார் நகர் அருகே வ.உ.சி. நகரில்  10க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் கடந்த  2 வாரத்துக்கு மேலாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றன.  வஉசி நகர், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதி யாகும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த பகுதி யில் உள்ள 12 தெரு விளக்குகள் பல நாட்க ளாக எரியாமல் இருந்ததால் இந்த வீதிகள் அனைத்தும் இருளில் மூழ்கிக் கிடந்தன. இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இந்த தெரு விளக்குகளை சரி  செய்து தர வலியுறுத்தி ஆகஸ்ட் 10ஆம் தேதி  தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மாநகராட்சி மூலம் மேற்கண்ட பகுதி தெரு  விளக்குகள் சரி செய்யப்பட்டன. அதன் பிறகு  சிறிது நாட்கள் இந்த தெரு விளக்குகள் நன் றாக எரிந்தன. இந்நிலையில் தீபாவளி பண்டி கைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து, இந்த தெரு விளக்குகள் 10க்கும் மேற்பட் டவை தொடர்ந்து பகலிலும், இரவிலும் என 24  மணி நேரமும் தொடர்ச்சியாக எரிந்து வருகின் றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநக ராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் இதை சரி செய்வதற்கு யாரும் வரவில்லை என இப்பகுதி மக்கள் கூறினர்.

ஏறத்தாழ 15  நாட்களாக 10க்கும் மேற்பட்ட தெரு விளக் குகள் தொடர்ந்து பகலிலும் எரிந்து கொண்டி ருந்தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும்,  இதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த  வேண்டியிருக்கும். மக்கள் செலுத்தும் வரிப் பணம்தானே இதில் வீணாக்கப்படுகிறது என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். வீட்டு  மின் கட்டணத்தை ஒருபுறம் அதிகரித்துள் ளனர். மின் கட்டணத்தை செலுத்தாவிட் டால் இணைப்புத் துண்டிக்கப்படும் என அறி விப்பதுடன், ஓரிரு நாட்களில் உடனடியாக மின் இணைப்பையும் துண்டித்து விடுகின்ற னர். ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தின் நேரடி  கட்டுப்பாட்டில் உள்ள இந்த தெரு விளக்கு களை முறையாக பராமரிக்க வேண்டாமா? என்றும் கேள்வி எழுப்பினர். அத்துடன், இந்த தெரு விளக்குகள் பல நாட்கள் எரியாமல் இருளில் இருந்தபோது சரி  செய்வதற்காக தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அது போல இப் போது எரிந்து கொண்டிருக்கும் அணை யாத தெரு விளக்குகளை அணைப்பதற்கும் போராட்டம் நடத்தினால் தான் இது தொடர் பான அலுவலர்கள் வந்து வேலை செய்வார் களா என்றும் கேள்வி எழுப்பினர். மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு,  மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாலிபர்  சங்கத்தைச் சேர்ந்த அருண் கூறினார்.