districts

img

காரை சேதப்படுத்திய யானை

உதகை, நவ.23- நெலாக்கோட்டை பகுதி யில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை ஆக்ரோசமாக தந்தங் களால் குத்தி காட்டு யானை  சேதப்படுத்திய சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது.  நீலகிரி மாவட்டம், பந்த லூர் அருகே நெலாக் கோட்டை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிக ரித்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்  நெலாக்கோட்டை அரசு பள்ளி மைதானத்தில் இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது மைதானத் தில் காட்டு யானை நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. அதேபோல், சனியன்று மாலை நெலாக்கோட்டை பகுதி யில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மிகுந்த ஆக்ரோசத்துடன் தந்தங்களால் குத்தி சேதப் படுத்தியது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உடனடி யாக பட்டாசுகள் வெடித்து சத்தமிட்டு யானையை விரட்டினர்.  காரில் பயணிகள் மற்றும்  பொதுமக்கள் யாரும் அப்பகுதி யில் இல்லாததால் பெரும்  அசம்பாவிதமானது தவிர்க்கப் பட்டது.