districts

img

நிறுத்தப்பட்ட 100 நாள் வேலை - விதொச கண்டனம்

கோபி, ஏப்.25- கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்காமல் சுமார் ஆறு மாதங்க ளாக சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளதற்கு அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளை யத்தில் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் சண்முகவல்லி உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் ஆ.பழனிசாமி பங் கேற்றார்.  இதில், ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் முதல் ஆறு மாதமாக வேலை கொடுக்காமல் சட்ட விரோ தமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராம பகுதிகளில் விவசாய தொழிலாளர் குடும்பங் கள் வருவாய் இழப்பு ஏற்பட்டு உணவு, மருத் துவம், குழந்தைகள் பராமரிப்பு செய்தல் உள்ளிட்டவை கிடைக்காமல் அவதிக்கு உள் ளாகின்றனர். எனவே ஒன்றிய அரசு உடன டியாக ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மாவட் டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் 100 நாள் வேலை திட்ட  பயனாளிகள் மனு அளிக்கும் போராட் டத்தை நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.