districts

விசைத்தறிகள் நிறுத்தம்: தொழிலாளர்கள் வேலையிழப்பு

ஈரோடு, அக்.17- ரயான் துணி உற்பத்தி பாதிப்பு கார ணமாக விசைத்தறிகள் நிறுத்தப்பட்ட தால், தொழிலாளர்கள் வேலை இழந் துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள விசைத் தறிகளில் காட்டன் மற்றும் ரயான் துணி களின் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு அரசின் விலை யில்லா வேட்டி-சேலைகள், பள்ளிக்கூட சீருடைகளும் உற்பத்தி செய்யப்படுகி றது. ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் டையிங், பிளிச்சிங் செய்வதற் காக ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், குஜ ராத்தில் டையிங் பணிகள் பாதிக்கப் பட்டு உள்ளதால், ஈரோட்டில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் அனுப்பி வைக்கப்படாமல் குடோனில் தேக்கம் அடைந்துள்ளன. அதனால் ரயான் துணிகளின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. எனவே விசைத்தறிகளும் நிறுத்தப்பட்டு உள்ளதால், தொழிலா ளர்கள் வேலை இழந்து உள்ளனர்.  இதுகுறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில், குஜராத் மாநிலத்தில் கழி வுநீர் வெளியேற்றம் தொடர்பாக பிரச் சனை இருப்பதால் டையிங் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் உட் பட 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டு  உள்ளதால், அங்கு துணிகளை அனுப்பி திரும்பப்பெற முடியாத நிலை உள் ளது. எனவே, டையிங் பணிகளுக்காக துணிகள் ஈரோட்டில் இருந்து அனுப்பி  வைக்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்கள் தேங்கி இருப்பதால், புதிதாக உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நூற்றுக்கணக் கான விசைத்தறிகள் நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளன, என்றனர்.