கோவை, மே 10- கோவையில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை உக்கடத்திலிருந்து செவ்வாயன்று வெள்ளமடை நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று காந்திபுரம் நகரப்பேருந்து நிலையத்திற்குள் சென்றபோது, அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து ஒன்று வழிவிடாமல் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தனியார் பேருந்து ஓட்டுநர் சந்தோஷ் மற்றும் நடத்துநனர்கள் வெங்கடேஷ், ரஞ்சித் ஆகியோர், அரசு பேருந்து ஓட்டுநர் கார்த்திக் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்கு வாதம் முற்றவே இரு தரப்பிற் கும் இடையே கைகலப்பு ஏற்பட் டுள்ளது. இதில், அரசு பேருந்து ஓட்டுநர் கார்த்திக் காயமடைந்தார். இதையடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த திடீர் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.