districts

img

நெடுங்கற்களை பாதுகாக்க கோரிக்கை

உடுமலை, ஆக.24- வரலாற்று பரிமாணத்தை, பண் பாடு, பாரம்பரியத்தை பறைசாட் டும் நெடுங்கற்கள் மண்ணில் புதைந்து வரும் நிலையில், இதனை  பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் தாலூகா, இன்றைய கண் ணாடிப்புத்தூர் பகுதி என்பது கடந்த காலங்களில் வீரபாண்டிய சதுர் வேதி மங்கலம் எனப் புகழ்பெற்ற பகுதியாக இருந்து உள்ளது. இப் பகுதியானது கடந்த 11, 12 ஆம் நூற் றாண்டுகளில் கட்டப்பட்ட  திருநந் தீஸ்வரர், திருக்கைலாய நாதர் கோயில்களில் ஏராளமான கல் வெட்டுகள் உள்ளது. இதில் நிலதா னம், இறையிலி நிலங்கள்  குறித்து கல்வெட்டுப் பதிவுகள் இருக்கின் றன. மேலும், சேரனை வென்ற சோழன் பெருவெளி என்றும் சோழ மாதேவி பெருவழி, வீரநாராயணப் பெருவழி என்றும் பெருவழி இருந் தமைக்கான சான்றுகளும் இப் பகுதியில் உள்ளன.

கண்ணாடிப் புத்தூர், நீலம்பூர் பகுதியில் ஈரா யிரம் காலத்திற்கும் முற்பட்ட கற் திட்டை உள்ளதால் இப்பகுதி மிகுந்த தொல்பழங்காலமான பகுதி என் பதை மீண்டும் உறுதி செய்யும் வகையில்  கண்ணாடிப்புத்தூரில் பத்தடிக்கும் உயரமான நெடுங்கல் இருப்பதை கண்டு உள்ளார்கள். ஆனால், இந்த நெடுகல் தற்போது மண்ணில் புதைத்து  வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், கடந்த காலங்க ளில் இந்த நெடுகல்லை மாப்பிள் ளைக்கல் எனவும், தாய்மாமன் மண மகளை கல்லில் அமர்த்தித் தனது தோளில் தூக்கிச்சென்றதாகவும், நெடுங்கல்லுக்கு கிடாய் வெட்டிய தாகவும், காலப்போக்கில் ஊரின்  வளர்ச்சியில் சாலைப்பகுதி உயர்ந்து நெடுங்கல்லின் உயரம் குறைந்து மண்ணில் புதைத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த நெடுங் கல்லை அந்தப் பகுதி மக்கள் தம் முடைய ஊரின் அடையாளச் சின்ன மாகப் பாதுகாத்து வருகின்றனர். கரைவழி நாட்டில் இருக்கும் கல் வெட்டுகள், தொல்பழங்காலச் சின் னங்களை உடுமலை வரலாற்று  ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து கரை வழி நாடு எனும் பெயரில்  ஆவணப்படுத்தி வருகின்றனர். மண் ணில் புதைந்து வரும் இந்த நெடுங் கற்களை பாதுகாக்க அரசும், தொல் லியல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத் துக்கின்றனர்.